என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்- தமிழக அரசு அறிவிப்பு
Byமாலை மலர்22 March 2020 5:23 PM GMT (Updated: 22 March 2020 5:23 PM GMT)
பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என தமிழக அரசு அறிவித்து உள்ளது.
சென்னை:
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வருகிற 27ந்தேதி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்க இருந்தன. ஆனால் கொரோனா வைரஸ் தொற்று அதிகரிக்காமல் இருக்க தேர்வை ஒத்தி வைக்கும்படி பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்திருந்தனர். தமிழக சட்டசபையில் தமிமுன் அன்சாரி சார்பிலும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இதையடுத்து தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொது தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் கூறினார். ஒத்திவைக்கப்பட்ட 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 15ந்தேதி தொடங்கி நடைபெறும் எனவும் 11 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகள் ஏற்கனவே அறிவித்தபடி நடைபெறும் எனவும் கூறினார்.
தமிழக பாடத்திட்டத்தை பின்பற்றுவதால் புதுச்சேரியிலும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அமைச்சர் கமலக்கண்ணன் கூறினார்.
10ம் வகுப்பு ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட கூடும் என கூறப்பட்டு வந்தது. எனினும், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என பள்ளி கல்விதுறை இன்று விளக்கம் அளித்து உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X