search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோயம்பேடு மார்க்கெட்
    X
    கோயம்பேடு மார்க்கெட்

    கோயம்பேடு மார்க்கெட் வழக்கம்போல செயல்படுகிறது- வியாபாரிகள் தகவல்

    கோயம்பேடு மார்க்கெட் வழக்கம்போல செயல்படுகிறது, பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை என்று வியாபாரிகள் தகவல் தெரிவித்துள்ளது.
    சென்னை:

    கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோயம்பேடு மார்க்கெட் மூடப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியானது.

    இதுகுறித்து சென்னை கோயம்பேடு மார்க்கெட் பழக்கமிஷன் ஏஜெண்டுகள் சங்க தலைவர் எஸ்.சீனிவாசன் கூறியதாவது:-

    கோயம்பேடு மார்க்கெட் மூடல் என்று தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது. இதில் உண்மையில்லை. வழக்கம்போலவே மார்க்கெட் செயல்படுகிறது. எனவே வியாபாரிகள் எந்த அச்சமும் கொள்ள தேவையில்லை. பொதுமக்களும் அச்சமடைய தேவையில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×