search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தி.நகர் கடைகள்
    X
    தி.நகர் கடைகள்

    கொரோனா அச்சுறுத்தல் - தி.நகரில் உள்ள பெரிய கடைகளை மூடுமாறு சென்னை மாநகராட்சி உத்தரவு

    கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் தியாகராய நகரில் உள்ள பெரிய கடைகளை மூடவேண்டும் என சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்துக் கல்வி நிறுவனங்களையும் மார்ச் 31-ம் தேதி வரை மூட அரசு உத்தரவிட்டு உள்ளது.

    இதேபோல், அங்கன்வாடி மையங்கள், அனைத்து திரையரங்குகள், மக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்கள், கேளிக்கை அரங்கங்கள், நீச்சல் குளங்கள், உடற்பயிற்சி மையங்கள், உயிரியல் பூங்காக்கள் மற்றும் அருங்காட்சியகங்களும் மூடப்பட வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டது.

    இந்நிலையில், கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் தியாகராய நகரில் உள்ள பெரிய கடைகளை மூடவேண்டும் என சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

    இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் சென்னை தி.நகரில் உள்ள பெரிய கடைகளை 10 நாட்களுக்கு மூடவேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
    Next Story
    ×