search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    மதுரையில் வாலிபர் உள்பட 2 பேர் தற்கொலை

    மதுரையில் வாலிபர் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை:

    அவனியாபுரம் ராஜமான் நகரைச் சேர்ந்தவர் ராஜபாண்டி (வயது 28). இவரது மனைவி உமா மகேஸ்வரி. கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார்.

    ராஜபாண்டி பல முறை குடும்பம் நடத்த அழைத்தும் மறுத்துவிட்டார். மனைவி பிரிந்த விரக்தியில் இருந்த ராஜபாண்டி மதுப்பழக்கத்துக்கு அடிமையானார்.

    இந்த நிலையில் உமா மகேஸ்வரி விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். இதனால் மனவேதனை அடைந்த ராஜபாண்டி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண் டார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    பழங்காநத்தம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி ஜெயந்தி (35). கடன் பிரச்சினையால் அவதிப்பட்ட இவர், சம்பவத்தன்று தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    சுப்பிரமணியபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகன்றனர்.

    Next Story
    ×