என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தஞ்சை அருகே கார் மோதி விவசாயி பலி
Byமாலை மலர்12 March 2020 10:26 AM GMT (Updated: 12 March 2020 10:26 AM GMT)
தஞ்சை அருகே மொபட் மீது கார் மோதிய விபத்தில் விவசாயி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வல்லம்:
தஞ்சையை அடுத்துள்ள செல்லப்பன் பேட்டை கீழத்தெருவை சேர்ந்தவர் விவசாயி அண்ணாதுரை. இவர் சம்பவத்தன்று மாலை மொபட்டில் தஞ்சை- திருச்சி சாலையில் வந்து கொண்டிருந்தார். முன்னையம்பட்டி பிரிவு சாலையில் செல்வதற்காக வலது புறமாக அண்ணா துரை மொபட்டை திருப்பி உள்ளார்.
அப்போது தஞ்சையில் இருந்து தேனி நோக்கி சென்று கொண்டிருந்த கார் மொபட் மீது படுவேகமாக மோதியது. இதில் அண்ணாதுரை சாலையில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து அண்ணாதுரையின் மனைவி பரமேஸ்வரி (44) கொடுத்த புகாரின் பேரில் காரை ஓட்டி வந்த தேனி மாவட்டம் உத்தமபாளையம் காந்திஜி தெருவை சேர்ந்த வனராஜன் (45) என்பவர் மீது வல்லம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தஞ்சையை அடுத்துள்ள செல்லப்பன் பேட்டை கீழத்தெருவை சேர்ந்தவர் விவசாயி அண்ணாதுரை. இவர் சம்பவத்தன்று மாலை மொபட்டில் தஞ்சை- திருச்சி சாலையில் வந்து கொண்டிருந்தார். முன்னையம்பட்டி பிரிவு சாலையில் செல்வதற்காக வலது புறமாக அண்ணா துரை மொபட்டை திருப்பி உள்ளார்.
அப்போது தஞ்சையில் இருந்து தேனி நோக்கி சென்று கொண்டிருந்த கார் மொபட் மீது படுவேகமாக மோதியது. இதில் அண்ணாதுரை சாலையில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து அண்ணாதுரையின் மனைவி பரமேஸ்வரி (44) கொடுத்த புகாரின் பேரில் காரை ஓட்டி வந்த தேனி மாவட்டம் உத்தமபாளையம் காந்திஜி தெருவை சேர்ந்த வனராஜன் (45) என்பவர் மீது வல்லம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X