search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நகை பறிப்பு
    X
    நகை பறிப்பு

    காந்திபுரம் பஸ் நிலையத்தில் 2 பெண்களிடம் 7½ பவுன் செயின் பறிப்பு

    காந்திபுரம் பஸ் நிலையத்தில் 2 பெண்களிடம் 7½ பவுன் செயின் பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை அருகே உள்ள தொண்டாமுத்தூரை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி விஜயலட்சுமி (வயது 39). சம்பவத்தன்று இவர் காந்திபுரம் பஸ் நிலையத்தில் தொண்டாமுத்தூருக்கு செல்வதற்காக பஸ்சில் உள்ள இருக்கையில் அமர்ந்து இருந்தார்.

    அப்போது அங்கு வந்த மர்மநபர் விஜயலட்சுமி கழுத்தில் அணிந்து இருந்த 5 பவுன் தங்க செயினை பறித்து தப்பிச் சென்றனர்.

    இதே போல காரமடை மதிபாளையத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி அம்பிகா (36). இவரும் காந்திபுரம் பஸ் நிலையத்தில் தனது ஊருக்கு செல்வதற்காக பஸ்சில் அமர்ந்து இருந்தார். அப்போது அங்கு வந்த மர்மநபர் யாரோ அம்பிகா கழுத்தில் அணிந்து இருந்த 2½ பவுன் செயினை பறித்து தப்பிச் சென்றனர். இவர்கள் 2 பேரும் காட்டூர் போலீசில் புகார் செய்தனர்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அடுத்தடுத்து 2 பெண்களிடம் 7½ பவுன் செயினை பறித்து தப்பிச் சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×