என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
காந்திபுரம் பஸ் நிலையத்தில் 2 பெண்களிடம் 7½ பவுன் செயின் பறிப்பு
கோவை:
கோவை அருகே உள்ள தொண்டாமுத்தூரை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி விஜயலட்சுமி (வயது 39). சம்பவத்தன்று இவர் காந்திபுரம் பஸ் நிலையத்தில் தொண்டாமுத்தூருக்கு செல்வதற்காக பஸ்சில் உள்ள இருக்கையில் அமர்ந்து இருந்தார்.
அப்போது அங்கு வந்த மர்மநபர் விஜயலட்சுமி கழுத்தில் அணிந்து இருந்த 5 பவுன் தங்க செயினை பறித்து தப்பிச் சென்றனர்.
இதே போல காரமடை மதிபாளையத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி அம்பிகா (36). இவரும் காந்திபுரம் பஸ் நிலையத்தில் தனது ஊருக்கு செல்வதற்காக பஸ்சில் அமர்ந்து இருந்தார். அப்போது அங்கு வந்த மர்மநபர் யாரோ அம்பிகா கழுத்தில் அணிந்து இருந்த 2½ பவுன் செயினை பறித்து தப்பிச் சென்றனர். இவர்கள் 2 பேரும் காட்டூர் போலீசில் புகார் செய்தனர்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அடுத்தடுத்து 2 பெண்களிடம் 7½ பவுன் செயினை பறித்து தப்பிச் சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்