search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்.
    X
    கோப்பு படம்.

    கன்னியாகுமரியில் ஆட்டோ டிரைவரிடம் செல்போன் திருட்டு

    கன்னியாகுமரியில் முகவரி கேட்பது போல் நடித்து ஆட்டோ டிரைவரிடம் 2 பேர் செல்போனை பறித்து சென்றனர்.
    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி பாலசுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்தவர் அருண் (வயது 37). ஆட்டோ டிரைவர்.

    இவர் சம்பவத்தன்று பயணிகளை ஏற்றுவதற்காக சிலுவை நகர் சந்திப்பில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். அவர்கள் அருணிடம் முகவரி கேட்பது போல் அவர் வைத்திருந்த செல்போனை திருடிக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். 

    இதுகுறித்து கன்னியாகுமரி போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் அன்பரசு வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×