search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செல்போன் திருட்டு"

    • கடையில் வைத்திருந்த ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் திருடி சென்றுள்ளனர்.
    • இருவர் மீது வழக்கு பதிவு ஊத்தங்கரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கிருஷ்ணகிரி கிளை சிறையில் அடைத்தனர்.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள உப்பாரப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மாதையன். இவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 13-ம் தேதி அன்று மளிகை பொருட்கள் வாங்குவதாக 2 பேர் வந்து மளிகை பொருட்கள் வாங்கிச் சென்றனர்.

    அப்போது கடையில் வைத்திருந்த ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் திருடி சென்றுள்ளனர். இது குறித்து மாதையன் ஊத்தங்கரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

    புகாரின் பேரில் ஊத்தங்கரை டி.எஸ்.பி பார்த்தீபன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து செல்போன் திருடிய நபர்களை சிசிடிவி கேமரா மூலம் ஆய்வு செய்து தனிப்படை போலீஸார் தேடி வந்துள்ளனர்.

    இதில் தனிப்படை உதவி காவல் ஆய்வாளர் சீனிவாசன் தலைமையில் தலைமை காவலர்கள் வடிவேல், பிராபாகரன், மணிவேல் அடங்கிய தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களில் தேடி சென்று சிசிடிவி கேமரா மூலம் ஆய்வு செய்து விசாரணை செய்து வந்தனர்.

    விசாரணையில் திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி பகுதியை சேர்ந்த முகமதுஅலி வயது (22), அதே பகுதியைச் சேர்ந்த ஜாபர்பாஷா (22) ஆகியோர் செல்போனை திருடியது தெரிய வந்தது. 2 பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்ததுடன் இருவர் மீது வழக்கு பதிவு ஊத்தங்கரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கிருஷ்ணகிரி கிளை சிறையில் அடைத்தனர்.

    • தூங்கிக்கொண்டிருந்த போது துணிகரம்
    • பைக் மற்றும் செல்போன் பறிமுதல்

    காவேரிப்பாக்கம்:

    தூத்துக்குடி மாவட்டம் முந்தைய புரத்தைச் சேர்ந்தவர் முத்துவேல் (வயது 31). டிரைவர்.

    இவர் நேற்று முன்தினம் இரவு சென்னையில் இருந்து மினி வேன் மூலம் லோடு களை ஏற்றி க்கொண்டு வேலூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    ராணிப்பேட்டை மாவ ட்டம், காவேரிப்பாக்கம் அருகே வந்து கொண்டி ருந்தார். அப்போது சாப்பிடுவதற்காக அந்த பகுதியில் உள்ள ஓட்டல் அருகே வேனை நிறுத்தினார்.

    ஓட்டலில் சாப்பிட்டு விட்டு வேனில் சிறிது நேரம் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். இதனை நோட்டமிட்ட மர்ம கும்பல் முத்து வேல் செல்போனை திடீரென பறித்து கொண்டு அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த முத்துவேல் காவேரிப்பாக்கம் போலீசில் புகார் அளித்தார்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து செல்போனை திருடி சென்ற திருமலை ச்சேரி பகுதியைச் சேர்ந்த தீபக், வாலாஜாவை சேர்ந்த கோகுல் (22), மோனீஸ்வரன் (21), பெங்களூரைச் சேர்ந்த வெங்கடேசன் (23) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் அவர்களிடம் இருந்து பைக் மற்றும் செல்போனை பறிமுதல் செய்து 4 பேரையும் கைது செய்தனர்.

    • சம்பவத்தன்று பெரியகுளத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு வீடு திரும்பும் போது அன்னஞ்சி விலக்கு அருகே ஒருவர் லிப்ட் கேட்டு பைக்கில் வந்துள்ளார்.
    • இதையடுத்து உடன் வந்தவர் சம்பவ இடத்தில் இருந்து பைக்கை திருடி சென்றுள்ளார்.

    பெரியகுளம்:

    தேனி மாவட்டம் அல்லிநகரத்தைச் சேர்ந்தவர் முகமது இப்ராஹிம். இவர் சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று பெரியகுளத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு வீடு திரும்பும் போது அன்னஞ்சி விலக்கு அருகே ஒருவர் லிப்ட் கேட்டு இப்ராஹிம் உடன் பைக்கில் வந்துள்ளார். வழியில் வாகனத்தை நிறுத்திவிட்டு இப்ராஹிம் சென்றுள்ளார்.

    இதையடுத்து உடன் வந்தவர் சம்பவ இடத்தில் இருந்து பைக்கை திருடி சென்றுள்ளார். இதுகுறித்து தென்கரை போலீசில் இப்ராஹிம் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    பெரியகுளம் அருகே தென்கரையை சேர்ந்தவர் பாண்டியன். இவர் அதே பகுதியில் மெடிக்கல் கடை வைத்துள்ளார். இந்நிலையில சம்பவத்தன்று அருகில் உள்ளஓட்டலுக்கு சாப்பாடு வாங்க சென்ற போது, கடையில் இருந்த செல்போனை மர்மநபர் திருடி சென்றுள்ளார். இதுகுறித்து தென்கரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • திருடப்பட்ட செல்போன், எந்த சட்ட விரோத செயல்களுக்கும் பயன்படுத்த முடியாது.
    • இணையதளம் மூலம் பொதுமக்கள், தங்களது தொலைந்த மற்றும் திருடுபோன செல்போன் குறித்த தற்போதைய நிலையை அறியும் வசதி உள்ளது.

    சென்னை:

    தமிழக சைபர் குற்றப்பிரிவு போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மத்திய அரசின் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் தொலைத் தொடர்புத் துறை கடந்த மே 17-ந்தேதி டிஜிட்டல் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பை செயல்படுத்துவதற்காக குடிமக்களை மையமாகக் கொண்டு சஞ்சார் சாத்தி என்ற இணையதளத்தை தொடங்கியது.

    சி.இ.ஐ.ஆர். என்ற இணையதளத்தில் பொதுமக்கள் தங்களுடைய தொலைந்த மற்றும் திருடு போன செல்போன்கள் குறித்து புகார் அளிக்கலாம்.

    தொலைந்த மற்றும் திருடப்பட்ட செல்போன்களை கண்டறிய தமிழ்நாடு சைபர் குற்றப்பிரிவு, தொலைத் தொடர்புத்துறையுடன் இணைந்து மாநகர காவல் ஆணையரகங்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்கள் மூலம் அனைத்து காவல் நிலையங்களுக்கும் சி.இ.ஐ.ஆர். இணையதளத்தில் ஒரு கணக்கை தொடங்கியுள்ளது.

    இதன்மூலம் திருடப்பட்ட செல்போன் ஐ.எம்.இ.ஐ. எண்ணை முடக்க உடனடியாக காவல்துறையினர் வலியுறுத்த முடியும். இந்த வலியுறுத்தலால் 24 மணி நேரத்துக்குள் ஐ.எம்.இ.ஐ. எண் முடக்கப்படும்.

    இதனால் திருடப்பட்ட செல்போன், எந்த சட்ட விரோத செயல்களுக்கும் பயன்படுத்த முடியாது. இந்த இணையதளம் மூலம் பொதுமக்கள், தங்களது தொலைந்த மற்றும் திருடுபோன செல்போன் குறித்த தற்போதைய நிலையை அறியும் வசதி உள்ளது.

    அதோடு மக்கள் 14422 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலம் செல்போனின் ஐ.எம்.இ.ஐ. எண் குறித்த உண்மைத்தன்மையை அறிந்து கொள்ள முடியும். இதில் செல்போன் வகை விவரங்கள் வழங்கப்படும்.Tafcop சொந்தமான https://tafcop.sancharsaathi.gov.in/telecomuser/apy என்ற இணையதளத்துக்குள் தங்கள் செல்போன் எண்ணை கொண்டு உள் நுழைந்தால், அவர்கள் பெயரில் எத்தனை எண்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்ற விவரத்தையும் மக்கள் பெற முடியும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • டிரைவரிடம் செல்போனை பறித்துச் சென்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    • போலீசார் வழக்குபதிவு செய்து செல்போனை திருடிக் கொண்டு தப்பி ஓடிய 2 பெண்களையும் தேடி வருகிறார்கள்.

    சென்னை:

    நகைச்சுவை நடிகர் வடிவேலு திரைப்படம் ஒன்றில் மோட்டார் சைக்கிளில் முன்பு போய் தனது ஆட்களை விழச்செய்து மோட்டார் சைக்கிளை ஏற்றிவிட்டதாக கூறி பணம் பறிப்பார். இந்த காட்சி வயிறு குலுங்க சிரிக்க வைப்பதாக அமைந்து இருக்கும்.

    இந்த நிலையில் அதே பாணியில் சென்னை புரசை வாக்கத்தில் 2 பெண்கள் ஆட்டோ மீது போய் விழுந்து டிரைவரிடம் செல்போனை பறித்துச் சென்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    சென்னை கொளத்தூர் பொன்னியம்மன் மேடு பகுதியை சேர்ந்தவர் பால செல்வ விநாயகம். இவர் புரசைவாக்கம் சுந்தரம் வேன் சந்திப்பு மேனாட் தெருவில் தனது ஆட் டோவை ஓட்டிச்சென்று கொண்டிருந்தார். அப் போது அந்த வழியாக சென்ற 2 பெண்கள் திடீரென ஆட்டோவின் முன்னால் பாய்ந்தனர்.

    பின்னர் அவர்கள் தங்கள் மீது ஆட்டோவை ஏற்றிவிட்டதாக கூறி உறவினர்களை வரவழைத்து உள்ளனர். ஆட்டோ டிரைவர் பால செல்வ விநாயகத்தை தாக்கி ரூ.12 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை பறித்துக் கொண்டு 2 பெண்களும் தப்பிஓடி தலைமறைவானார்கள்.

    இதுபற்றி பால செல்வ விநாயகம் வேப்பேரி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குபதிவு செய்து செல்போனை திருடிக் கொண்டு தப்பி ஓடிய 2 பெண்களையும் தேடி வருகிறார்கள்.

    • ஓமலூர் பஸ் நிலையத்தில் இருந்து தினமும் பல்வேறு பகுதிகளுக்கு 100-க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகிறது.
    • பஸ்சில் இருந்து இறங்கிய 5 பேரிடமும், பஸ் ஏறிய 7 பேரிடமும் ஒரே நேரத்தில் செல்போன்கள் திருட்டு நடந்துள்ளது. 3 பேர் கொண்ட கும்பல் இந்த திருட்டில் ஈடுபட்டதாக தெரிகிறது.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் பஸ் நிலையத்தில் இருந்து தினமும் பல்வேறு பகுதிகளுக்கு 100-க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகிறது. மேலும் ஓமலூர் பஸ் நிலையம் பல்வேறு பெரு நகரங்களின் இணைப்பு நகராக இருப்பதால் தினமும் லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.

    இந்த நிலையில் நேற்று மாலை ஓமலூரில் இருந்து தருமபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர் செல்வதற்காக பஸ் நிலையத்தில் மக்கள் பலரும் காத்திருந்தனர். அப்போது அங்கு வந்த தனியார் பஸ்சில் இருந்து பலரும் இறங்கி ஏறினார்.

    கூட்டல் நெரிசல்

    இந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி பஸ்சில் இருந்து இறங்கிய 5 பேரிடமும், பஸ் ஏறிய 7 பேரிடமும் ஒரே நேரத்தில் செல்போன்கள் திருட்டு நடந்துள்ளது. 3 பேர் கொண்ட கும்பல் இந்த திருட்டில் ஈடுபட்டதாக தெரிகிறது.

    இதனிடையே செல்போன் திருடப்படு வதை உணர்ந்த ஒருவர் மட்டும் தன்னிடம் செல்போன் திருடிய ஒரு வாலிபரை விரட்டினார். மேலும் செல்போன் திருடிகொண்டு போகிறான் பிடியுங்கள் என்று கத்தியபடியே சென்றுள்ளார்.

    போலீசில் ஒப்படைப்பு

    இதைகேட்ட பஸ் பயணிகள் அந்த வாலிபரை சுற்றி வளைத்து பிடித்தனர். அதற்குள் அந்த வாலிபர் திருடிய செல்போன்களை மற்ற 2 நபர்களிடம் கொடுத்துவிட்டதாக தெரிகிறது. அவர்கள் அங்கிருந்து தப்பி விட்டனர்.

    இதனிடையே பிடிபட்ட வாலிபரை ஓமலூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    அதன் பிறகு தான் தங்களது செல்போனை காணவில்லை என மொத்தம் 12 பேர் புகார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து பிடிபட்ட வாலிபரிடம் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தப்பியோடிய 2 பேர் குறித்தும் விசாரணை நடத்திய போலீசார் அவர்களையும் தேடி வருகின்றனர்.A

    • கண்காணிப்பு கேமரா மூலம் சிக்கினார்
    • சிறையில் அடைத்தனர்

    ஆலங்காயம்:

    வாணியம்பாடி அடுத்த திருமாஞ்சோலையை சேர்ந்தவர் பிரியங்கா (வயது 24). இவர் கடந்த 4-ந் தேதி சிகிச்சைக்காக சி எல் சாலையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு மொப்பட்டில் சென்றார்.

    அப்போது செல்போன் மற்றும் தங்க கம்மல் ஆகியவற்றை பைக் சீட்டின் அடியில் வைத்து விட்டு ஆஸ்பத்திரிக்குள் சென்றுள்ளார்.

    இதனை நோட்டமிட்ட மர்ம நபர் பைக்கில் இருந்த செல்போன் மற்றும் தங்க கம்மலை திருடிக் கொண்டு அங்கிருந்து சென்று விட்டார்.

    சிறிது நேரம் ஆஸ்பத்திரியில் இருந்து சிகிச்சை முடிந்து வெளியே வந்த பிரியங்கா மொபட்டின் சீட்டு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    மேலும் அதிலிருந்த நகை மற்றும் செல்போன் மாயமானது தெரியவந்தது. பின்னர் பிரியங்கா அங்கு பொருத்த ப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து பார்த்தார்.

    அப்போது அந்தப் பகுதியில் நீண்ட நேரம் நின்றிருந்த நபர் மொபட்டின் அருகில் வந்து ஆள் நடமாட்டம் இல்லாத போது அதிலிருந்து நகை மற்றும் செல்போனை திருடி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

    இதுகுறித்து பிரியங்கா வாணியம்பாடி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த சங்கர் (45), என்பவரை நேற்று இரவு கைது செய்தனர்.

    மேலும் அவரிடம் இருந்து செல்போன் மற்றும் கம்மல் ஆகியவற்றை பறிமுதல் செய்து சங்கரை சிறையில் அடைத்தனர்.

    • கவிதா வீட்டில் வைத்திருந்த 2 செல்போன்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
    • 2 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 3 செல்போன்களையும் பறிமுதல் செய்தனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் மொரப்பூரை அடுத்த தீச்சானூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை. இவரது மனைவி கவிதா (வயது45). இவரது வீட்டின் அருகே வசித்து வருபவர் சிதம்பரம். இவரது மனைவி மல்லிகா.

    இந்த நிலையில் சம்பவத்தன்று கவிதா வீட்டில் வைத்திருந்த 2 செல்போன்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதேபோன்று மல்லிகா வீட்டில் வைத்திருந்த செல்போனையும் அந்த மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.

    இதுகுறித்து கவிதா மொரப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் மொரப்பூரை அடுத்த புதுபட்டியைச் சேர்ந்த குமார் மகன் குடியரசன் (21), அதே பகுதியைச் சேர்ந்த பீமாராவ் (26) ஆகிய 2 பேரும் சேர்ந்து 3 செல்போன்களை திருடியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 3 செல்போன்களையும் பறிமுதல் செய்தனர்.

    • அமைச்சர் சந்திரபிரியங்காவின் ஆதரவாளர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு மறியலில் ஈடுபட்டனர்.
    • அமைச்சர் சந்திரபிரியாங்காவின் செல்போனை நைசாக திருடி சென்று விட்டனர்.

    திருமுருகன் எம்.எல்.ஏ. ஆதரவாளர்கள் தாக்கியதை கண்டித்து அமைச்சர் சந்திரபிரியங்காவின் ஆதரவாளர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையறிந்த அமைச்சர் சந்திரபிரியங்கா சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார்.

    அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட தனது ஆதரவாளர்களை சமாதானப்படுத்திக்கொண்டிருந்தார். அப்போது யாரோ அமைச்சர் சந்திரபிரியாங்காவின் செல்போனை நைசாக திருடி சென்று விட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த சந்திரிபிரியங்கா சிறிது நேரம் செய்வது அறியாமல் திகைத்து போனார்.

    • ராம் நகரைச் சேர்ந்த 17வயது சிறுவன், ஆஞ்சியின் செல்போனை திருடி தப்பி ஓடினார்.
    • அந்த சிறுவனை மடக்கி பிடித்து ஓசூர் டவுன் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ராயக்கோட்டை சாலை ஹவுசிங்போர்டு பகுதியைச் சேர்ந்தவர் ஆஞ்சி (வயது28).

    இவர் சம்பவத்தன்று அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு மாரியம்மன் கோவில் அருகே ராம் நகரைச் சேர்ந்த 17வயது சிறுவன், ஆஞ்சியின் செல்போனை திருடி தப்பி ஓடினார்.

    உடனே அவர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அந்த சிறுவனை மடக்கி பிடித்து ஓசூர் டவுன் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுவனை கைது செய்தனர். 

    • கடந்த சில நாட்களாகவே அரசு ஆஸ்பத்திரியில் ்நோயாளிகளின் பொருட்கள் அதிக அளவில் திருடுபோயி உள்ளது.
    • தொடர்ந்து உள்நோயாகளிடம் பணம், செல்போன் திருடப்படுவது தொடர்கதையாகி வருகிறது. எனவே மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு தினசரி ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற வருகின்றனர்.மேலும் அங்கு தங்கி ஏராளமானோர் பல்வேறு பரிசோத னைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    அங்கிருக்கும் நோயாளிகளுக்கு உதவியாக அவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் தங்குகின்றனர். கடந்த சில நாட்களாகவே அரசு ஆஸ்பத்திரியில் ்நோயாளிகளின் பொருட்கள் அதிக அளவில் திருடுபோயி உள்ளது.மேலும் வெளி ஆட்களின் அட்டகாசத்தால் நோயாளிகள் அச்சம் அடைந்துள்ளனர். குறிப்பாக பைக் சாகத்தில் ஈடுபடும் நபர்கள் மற்றும் குடிபோதையில் ரகளை செய்பவர்கள் தொல்லை அதிகரித்துள்ளது. கடந்த வாரம் காவலாளி தாக்கப்பட்டார்.

    திண்டுக்கல் அருகே காமலாபுரம் சக்கைய நாயக்கனூரை சேர்ந்தவர் வேளாங்கண்ணி மகன் அருள் சகாயராஜ் (23). குடும்ப பிரச்சினை காரணமாக விஷம் குடித்த இவர் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் இன்று அதிகாலையில் இவரது செல்போனை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். தொடர்ந்து உள்நோயாகளிடம் பணம், செல்போன் திருடப்படுவது தொடர்கதையாகி வருகிறது. எனவே மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர் ஜெயராமனின் செல்போனை திருடி தப்பிசென்று விட்டார்.
    • போலீசார் விரைந்து வந்து விசாரணை செய்த போது சென்ட்ரல் பஸ் நிறுத்தம் அருகே சந்தேகத்திற்கிடமாக நின்ற வாலிபரை பிடித்து விசாரித்தனர்.

    ராயபுரம்:

    திருவொற்றியூர்,காலடிப்பேட்டையை சேர்ந்தவர் ஜெயராமன் (69). இவர் சென்ட்ரல் பஸ் நிறுத்தத்தில் இருந்து திருவொற்றியூர் செல்வதற்காக மாநகர பஸ்சில் (எண்28) பயணம் செய்தார். அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர் ஜெயராமனின் செல்போனை திருடி தப்பிசென்று விட்டார்.

    இதுகுறித்து பூக்கடை போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை செய்த போது சென்ட்ரல் பஸ் நிறுத்தம் அருகே சந்தேகத்திற்கிடமாக நின்ற வாலிபரை பிடித்து விசாரித்தனர். அவர் ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த கராடி பவன்குமார் (20) என்பதும் முதியவர் ஜெயராமனிடம் செல்போன் பறித்ததும் தெரியவந்தது.இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

    ஆந்திராவில் இருந்து சென்னைக்கு தினமும் ரெயில் மூலம் வரும் அவர் மக்கள் கூட்ட நெரிசல் அதிகம் உள்ள இடங்களில் புகுந்து செல்போன்களை திருடி அதனை ஆந்திராவில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

    ×