search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    அகஸ்தீஸ்வரம் அருகே காதல் தகராறில் வாலிபர் மீது தாக்குதல்- தொழிலாளி கைது

    அகஸ்தீஸ்வரம் அருகே காதல் தகராறில் வாலிபரை தாக்கிய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
    தென்தாமரைகுளம்:

    அகஸ்தீஸ்வரம் அருகே பூஜபுரவிளையை சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மகன் பாலாஅஜீத் (வயது 24). இவர் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து வந்தார். காதல் விவகாரம் பெண்ணின் உறவினர்களுக்கு தெரிய வந்தது. இதை அவர்கள் கண்டித்தனர்.

    இந்த நிலையில் பாலா அஜீத் சம்பவத்தன்று பூஜபுரவிளை பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த அந்த பெண்ணின் உறவினர் ஸ்ரீகண்டன் (27) என்பவர் பாலாஅஜீத்தை தடுத்து நிறுத்தி தகராறு செய்தார். எனது உறவினர் மகளை எப்படி நீ பார்ப்பாய் என்று கூறி பாலா அஜீத்தை தாக்கினார்.

    இதில் படுகாயம் அடைந்த அவர் கன்னியாகுமரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து பாலா அஜீத் தென்தாமரைகுளம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ் பெக்டர்கள் மீனாகுமாரி, ஜாண் கென்னடி ஆகியோர் வழக்குபதிவு செய்து விசா ரணை நடத்தினார்கள்.

    ஸ்ரீகண்டன் மீது இந்திய தண்டனைச்சட்டம் 324, 294(பி), 506(2) ஐ.பி.சி. ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து அவரை கைது செய்தனர்.
    Next Story
    ×