என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
திருமணமான 6 மாதத்தில் இளம் பெண் தற்கொலை- சாவில் சந்தேகம் என போலிசில் புகார்
ஆற்காடு:
ஆற்காடு அடுத்த முப்பதுவெட்டி, பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் சவுந்தரராஜன், இவருக்கும் ராணிப்பேட்டை சீனிவாசன் நகரை சேர்ந்த தீபஜோதி (28) என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இந்த நிலையில் நேற்றிரவு கணவன் மனைவி இருவரும் தூங்கினர். இரவு 12 மணிக்கு கண் விழித்த சவுந்தரராஜன் அருகில் படுத்திருந்த மனைவி காணாததை கண்டு திடுக்கிட்டார்.
பின்னர் வேறு அறையின் கதவை திறந்து பார்த்த போது தீபஜோதி மின் விசிறியில் பிணமாக தொங்கினாள்.
இது குறித்து தீபஜோதியின் பெற்றோருக்கு சவுந்தரராஜன் தகவல் தெரிவித்தார். முப்பதுவெட்டி வந்த அவர்கள் மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக ஆற்காடு டவுன் போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் ஆனந்தன் வழக்கு பதிவு செய்து தீபஜோதி பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
திருமணமான 6 மாதத்தில் இளம் பெண் தற்கொலை செய்ததால் ராணிப்பேட்டை சப்-கலெக்டர் இளம்பகவத் விசாரணை நடத்தி வருகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்