என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பவானி ஆற்றில் குதித்து முதியவர் தற்கொலை
Byமாலை மலர்25 Feb 2020 9:47 AM GMT (Updated: 25 Feb 2020 9:47 AM GMT)
பவானி ஆற்றில் குதித்து முதியவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேட்டுப்பாளையம்:
மேட்டுப்பாளையம் அடுத்துள்ள நெல்லித்துறை வேல் நகரை சேர்ந்தவர் நடராஜன் (68). இவர் வனபத்ரகாளியம்மன் கோவில் அருகே விருந்தினர் மண்டபம் வைத்து நடத்தி வந்தார்.
இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த 21-ந் தேதி பகல் நடராஜன் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மனைவி இந்திராணியிடம் கருவாடு வறுத்து தனக்கு தருமாறு கேட்டுள்ளார்.
அப்போது இந்திராணி இந்த வயதில் இப்படி குடித்துவிட்டு வருகிறீர்களே என்று கேட்டதாக தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த நடராஜன் தனது மனைவி இந்திராணியிடம் தகராறு செய்துவிட்டு வீட்டை விட்டு சென்றுவிட்டார் . பின்னர் அவர் திரும்பி வரவில்லை. அக்கம்பக்கம் விசாரித்தும் எங்கு தேடியும் அவரைப் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் நேற்று நெல்லித்துறை பவானி ஆற்று பாலத்திற்கு அடியில் ஆற்றில் நடராஜன் பிணமாக மிதப்பது தெரியவந்தது. போலீசாரின் விசாரணையில் அவர் பவானி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
மேட்டுப்பாளையம் போலீசார் நடராஜன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேட்டுப்பாளையம் அடுத்துள்ள நெல்லித்துறை வேல் நகரை சேர்ந்தவர் நடராஜன் (68). இவர் வனபத்ரகாளியம்மன் கோவில் அருகே விருந்தினர் மண்டபம் வைத்து நடத்தி வந்தார்.
இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த 21-ந் தேதி பகல் நடராஜன் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மனைவி இந்திராணியிடம் கருவாடு வறுத்து தனக்கு தருமாறு கேட்டுள்ளார்.
அப்போது இந்திராணி இந்த வயதில் இப்படி குடித்துவிட்டு வருகிறீர்களே என்று கேட்டதாக தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த நடராஜன் தனது மனைவி இந்திராணியிடம் தகராறு செய்துவிட்டு வீட்டை விட்டு சென்றுவிட்டார் . பின்னர் அவர் திரும்பி வரவில்லை. அக்கம்பக்கம் விசாரித்தும் எங்கு தேடியும் அவரைப் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் நேற்று நெல்லித்துறை பவானி ஆற்று பாலத்திற்கு அடியில் ஆற்றில் நடராஜன் பிணமாக மிதப்பது தெரியவந்தது. போலீசாரின் விசாரணையில் அவர் பவானி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
மேட்டுப்பாளையம் போலீசார் நடராஜன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X