என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெரம்பலூர் அருகே பெண்ணிடம் நகை பறிப்பு
Byமாலை மலர்23 Feb 2020 5:12 PM GMT (Updated: 23 Feb 2020 5:12 PM GMT)
பெரம்பலூர் அருகே மொபட்டில் சென்ற பெண்ணிடம் 6 பவுன் நகையை வாலிபர்கள் பறித்து சென்றனர்.
குன்னம்:
பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் பகுதியை அடுத்த நாட்டார்மங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ராம்பிரசாத் (வயது54). இவர் செட்டிகுளம் பகுதியில் போட்டோ ஸ்டூடியோ நடத்தி வருகிறார். இவரது மனைவி விஜயலட்சுமி (52). நேற்று மதியம் இவர் அவரது கணவருக்கு சாப்பாடு கொடுப்பதற்காக மொபட்டில் சென்றார்.
நாட்டார்மங்கலம் மலையடிவாரம் வெங்காய குடோன் பகுதியில் செல்லும் போது திடீரென ஹெல்மட் அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள், விஜயலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்க செயினை பறித்து கொண்டு தப்பி ஓடி விட்டனர்.
இது குறித்து ராம்பிரசாத் பாடாலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X