search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கணவர் புகார்"

    • விருதுநகர் அருகே 2-வது முறையாக மனைவி மாயமானார்.
    • இது தொடர்பாக அவரது கணவர் போலீசில் புகார் செய்தார்.

    விருதுநகர்

    விருதுநகர் அருகே உள்ள அல்லம்பட்டி பி.வி.ஆர். காலனியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது மனைவி கிருஷ்ணவேணி (வயது 30). இவர்களுக்கு 8 வருடங்களுக்கு முன்பு திருமணமானது.

    இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கிருஷ்ண வேணி கோவில்பட்டி யில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க செல்வதாக கூறிச் சென்றார். ஆனால் அவர் அங்கு செல்லாமல் மாரிக்கனி என்பவருடன் சென்றதாக கூறப்படுகிறது.

    இது குறித்து கணவர் கொ டுத்த புகாரின் அடிப் படையில் கோவில்பட்டி மேற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். கிருஷ்ணவேணி, மாரிக் கனி ஆகியோர் போலீஸ் நிலையத்தில் ஆஜராகினர். அவர்களை போலீசார் எச்சரித்து கிருஷ்ண வேணியை அவரது கணவருடன் அனுப்பி வைத்த னர். இந்த நிலையில் கிருஷ்ண வேணி மீண்டும் மாயமா னார். பல இடங்களில் தேடியும் கிடைக்க வில்லை. இது குறித்து ராஜ்குமார் சாத்தூர் டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • வத்திராயிருப்பு அருகே காதல் திருமணம் செய்த புதுப்பெண் கடத்தப்படடார்.
    • இதுகுறித்து அந்த பெண்ணின் கணவர் நத்தம்பட்டி போலீசில் புகார் செய்தார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே உள்ள லட்சுமியாபுரம் தெற்கு காலனி தெருவை சேர்ந்தவர் வேல்சாமி. இவரது மகன் ராஜஸ்வரன் (வயது28). இவரும், டி.மானகசேரியை சேர்ந்த சேது மகள் நாகராணி என்பவரும் காதலித்து வந்தனர். இதற்கு பெண் வீட்டார் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து கடந்த மாதம் 23-ந்தேதி ராஜேஸ்வரன், நாகராணி ஆகியோர் வீட்டை விட்டு வெளியேறி மூவரைவென்றானில் உள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். மேலும் குன்னூர் சார்பதிவாளர் அலுவலகத்திலும் திரும ணத்தை பதிவு செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின் 2 பேரும் லட்சுமியாபுரத்தில் வசித்து வந்தனர்.

    இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நாகராணியின் சகோதரர் செல்போனில் தொடர்பு கொண்டு தாய்க்கு உடல் நிலை சரியில்லை என்றும், ஆஸ்பத்திரியில் சேர்த்தி ருப்பதாகவும் கூறியுள்ளார்.

    இதையடுத்து நாகராணி தனது கணவருடன் தாயாரை பார்க்க ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றார். அப்போது அங்கிருந்த உறவினர்கள் தாயை மதுரையில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்திருப்பதாக கூறி நாக ராணியை மட்டும் காரில் அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. சிறிது நேரத்தில் ராஜேஸ்வரனின் வாட்ஸ்-அப்-க்கு நாகராணி அனுப்பிய தகவலில் தன்னை உறவினர்கள் கடத்தி செல்வதாக குறிப் பிட்டுள்ளார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த ராஜேஸ்வரன் இதுகுறித்து நத்தம்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மகாலட்சுமி திரும்ப வராததால் அவரது செல்போன் எண்ணுக்கு கார்த்திகேயன் போன் செய்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மகாலட்சுமியை தேடி வருகின்றனா்.

    ஈரோடு:

    ஈரோடு வீரப்பன்சத்திரம் கொத்துக்காரர் தோட்டத்தை சேர்ந்த கார்த்திகேயன் (32). தொழிலாளி. இவரது மனைவி மகாலட்சுமி (23). இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.

    இந்நிலையில் சம்பவத்தன்று கார்த்திகேயன் அவரது மனைவி மற்றும் குழந்தையுடன் சென்னிமலையில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்று விட்டு ஈரோடு நோக்கி வந்து கொண்டிருந்தார்.

    வெள்ளோடு அருகே வந்தபோது மகாலட்சுமி கழிப்பறைக்கு சென்று வருவதாக வருவதாக கூறி, அங்குள்ள கீழ் பவானி வாய்க்கால் கரையோரம் சென்றார்.

    நீண்ட நேரம் ஆகியும் மகாலட்சுமி திரும்ப வராததால் அவரது செல்போன் எண்ணுக்கு கார்த்திகேயன் போன் செய்தார். ஆனால் சுவிட்ச் ஆப் என வந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்து அக்கம்பக்கம், சுற்றுப்புற பகுதியில் தேடிப்பார்த்தும் மகாலட்சுமி கிடைக்கவில்லை. இதுகுறித்து வெள்ளோடு போலீசில் கார்த்திகேயன் புகார் அளித்தார்.

    இதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மகாலட்சுமியை தேடி வருகின்றனா்.

    • கல்லூரிக்கு செல்வதாக கூறி வீட்டை விட்டு வந்த அந்த மாணவி அதன்பிறகுவீடு திரும்பவில்லை.
    • மாணவியின் கணவர் ராமமூர்த்தி போலீசில் புகார் செய்துள்ளார்.

    கிருஷ்ணகிரி,

    திருவண்ணாமலை மாவட்டம் இளம்குளி கிராமத்தை சேர்ந்தவர் 19 வயது மாணவி. இவருக்கு சமீபத்தில்தான் திருமணம் நடந்தது. இவர் ஊத்தங்கரையில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார்.

    கடந்த 27-ந்தேதி கல்லூரிக்கு செல்வதாக கூறி வீட்டை விட்டு வந்த அந்த மாணவி அதன்பிறகுவீடு திரும்பவில்லை. அவர் குறித்து பல்வேறு இடங்களில்விசாரித்தும் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை.

    இந்நிலையில் ஊத்தங்கரை பகுதியை சேர்ந்த சுரேஷ் (வயது 19) என்ற வாலிபர்தான் அந்த மாணவியை கடத்தி சென்றிருக்கலாம் என்று மாணவியின் கணவர் ராமமூர்த்தி போலீசில் புகார் செய்துள்ளார்.அந்த புகாரின்பேரில் ஊத்தங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • ரம்யா டிப்ளமோ நர்சிங் முடித்து விட்டு தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வருகிறார்.
    • தொடர்பு கொண்ட போது அவர் தொலைபேசி அழைப்பை ஏற்கவில்லை.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அருகே திருக்கனங்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியன். இவரது மகன் குரு குமார் (வயது 26). இவர் சென்னையில் தங்கி லாரி டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ரம்யா (25) டிப்ளமோ நர்சிங் முடித்து விட்டு தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வருகிறார்.

    இவர்களுக்கு 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற தாகவும், இது நாள் வரை குழந்தை இல்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் ரம்யா கள்ளக்குறிச்சி அருகே மாமானந்தல் கிராமத்தில் வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வருகிறார். இந்நிலையில் குரு குமார் தினமும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது மனைவியிடம் பேசி வந்துள்ளார். சம்பவத்தன்று தனது மனைவியை தொலை பேசியில் தொடர்பு கொண்ட போது அவர் தொலைபேசி அழைப்பை ஏற்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த குரு குமார் வீட்டிற்கு வந்து பார்த்தபோது கதவு பூட்டி இருப்பது தெரியவந்தது. அக்கம், பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகள் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து குரு குமார் கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆதிலட்சுமிவீட்டை விட்டு சென்றவர் திடீர் என மாயமானார்.
    • திருவெண்ணைநல்லூர் போலீசார் விசாரிக்கிறார்கள்.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள பேரங்கியூர் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன். அவரது மனைவி ஆதிலட்சுமி (வயது 72) இவர் வீட்டை விட்டு சென்றவர் திடீர் என மாயமானார். அவர் எங்கு சென்றார்? என்ன ஆனார்? என்பது குறித்து திருவெண்ணைநல்லூர் போலீசார் விசாரிக்கிறார் கள்.

    ×