காதல் திருமணம் செய்த புதுப்பெண் கடத்தல்

வத்திராயிருப்பு அருகே காதல் திருமணம் செய்த புதுப்பெண் கடத்தப்படடார். இதுகுறித்து அந்த பெண்ணின் கணவர் நத்தம்பட்டி போலீசில் புகார் செய்தார்.
காதல் திருமணம் செய்த புதுப்பெண் கடத்தல்
Published on

விருதுநகர்

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே உள்ள லட்சுமியாபுரம் தெற்கு காலனி தெருவை சேர்ந்தவர் வேல்சாமி. இவரது மகன் ராஜஸ்வரன் (வயது28). இவரும், டி.மானகசேரியை சேர்ந்த சேது மகள் நாகராணி என்பவரும் காதலித்து வந்தனர். இதற்கு பெண் வீட்டார் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து கடந்த மாதம் 23-ந்தேதி ராஜேஸ்வரன், நாகராணி ஆகியோர் வீட்டை விட்டு வெளியேறி மூவரைவென்றானில் உள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். மேலும் குன்னூர் சார்பதிவாளர் அலுவலகத்திலும் திரும ணத்தை பதிவு செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின் 2 பேரும் லட்சுமியாபுரத்தில் வசித்து வந்தனர்.

இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நாகராணியின் சகோதரர் செல்போனில் தொடர்பு கொண்டு தாய்க்கு உடல் நிலை சரியில்லை என்றும், ஆஸ்பத்திரியில் சேர்த்தி ருப்பதாகவும் கூறியுள்ளார்.

இதையடுத்து நாகராணி தனது கணவருடன் தாயாரை பார்க்க ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றார். அப்போது அங்கிருந்த உறவினர்கள் தாயை மதுரையில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்திருப்பதாக கூறி நாக ராணியை மட்டும் காரில் அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. சிறிது நேரத்தில் ராஜேஸ்வரனின் வாட்ஸ்-அப்-க்கு நாகராணி அனுப்பிய தகவலில் தன்னை உறவினர்கள் கடத்தி செல்வதாக குறிப் பிட்டுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த ராஜேஸ்வரன் இதுகுறித்து நத்தம்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com