search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளை
    X
    கொள்ளை

    குளச்சல் அருகே கப்பல் ஊழியர் வீட்டில் 20 பவுன் நகை கொள்ளை

    குளச்சல் அருகே கப்பல் ஊழியர் வீட்டின் கதவை உடைத்து 20 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

    குளச்சல்:

    குளச்சல் அருகே சலேட் நகரை சேர்ந்தவர் ஜாண் ரோஸ் (வயது 55). இவரது மகன்கள் இன்சென்ட் விஜூ, இன் சென்ட் வின்ஸ். இவர்கள் 2 பேரும் வெளிநாட்டில் கப்பலில் ஊழியர்களாக வேலை பார்த்து வருகிறார்கள்.

    இன்சென்ட் விஜூ, இன்சென்ட் வின்ஸ் ஆகியோர் வெளிநாட்டில் தங்கி வேலை பார்த்து வருவதால் விடுமுறையின் போது சொந்த ஊருக்கு வருவது வழக்கம். அப்போது அவர்கள் 2 பேரும் வெளி நாட்டில் உள்ளனர்.

    சலேட்நகரில் இவர்களது வீடுகள் அடுத்தடுத்து உள்ளது. அதேபோல அவர்களது உறவினர்களான சுஜின், ஸ்டீபன், தனிஸ்லாஸ் ஆகியோரின் வீடுகளும் அந்த பகுதியில் அமைந்து உள்ளது. அவர்களும் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்கள்.

    அந்த பகுதியில் நடைபெற்ற ஒரு கோவில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக ஜாண்ரோஸ் தனது குடும்பத்தினருடன் வீட்டை பூட்டிவிட்டு சென்று விட்டார். அவர்களது உறவினர்களும் கோவில் திருவிழாவிற்கு சென்றிருந்தனர். இரவு ஜாண்ரோஸ் வீடு திரும்பியபோது அவரது மகன் இன்சென்ட் விஜூ வின் வீட்டில் கொள்ளை நடந்திருப்பது தெரியவந்தது.

    வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட கொள்ளையர்கள் அந்த வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து உள்ளனர். அங்கு இருந்த பீரோவையும் அவர்கள் உடைத்து அதில் இருந்த தங்க கம்மல், வளையல்கள், நெக்லஸ் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றிருந்தனர். மொத்தம் 20 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.

    இன்சென்ட் விஜூவின் தம்பி இன்சென்ட் வின்ஸ் வீட்டிலும் கொள்ளையர்கள் புகுந்து உள்ளனர். ஆனால் அங்கு இருந்த எந்த பொருட்களும் கொள்ளையடிக்கப்பட வில்லை. அதேபோல அவர்களது உறவினர்கள் சுஜின், ஸ்டீபன், தனிஸ்லாஸ் ஆகியோர் வீடுகளிலும் கொள்ளையர்கள் கதவை உடைத்து கைவரிசை காட்டி உள்ளனர். அங்கு அவர்களுக்கு எதுவும் சிக்கவில்லை.

    இந்த துணிகர கொள்ளை பற்றி குளச்சல் போலீசில் ஜாண்ரோஸ் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். கொள்ளையர்களை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    Next Story
    ×