என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
தஞ்சை அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து 2 பேர் படுகாயம்
வல்லம்:
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள காரக்கோட்டையை சேர்ந்தவர் காமராஜ் (வயது 60). அதே பகுதியை சேர்ந்தவர் இவருடைய நண்பர் இளங்கோ(55). இருவரும் சொந்தமாக டிரான்ஸ்போர்ட் தொழில் செய்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று இருவரும் காரில் திருச்சிக்கு சென்றனர்.
காரை இளங்கோ ஓட்டி சென்றார். பின்னர் திருச்சியில் இருந்து தஞ்சை நோக்கி காரில் வந்தனர். அப்போது தஞ்சை -திருச்சி சாலையில் திருமலைசமுத்திரம் முத்தாளம்மன் கோவில் அருகே கார் வந்த போது திடீரென மாடு குறுக்கே வந்துள்ளது. இதில் நிலை தடுமாறிய கார் அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. காரில் படுகாயங்களுடன் சிக்கி இருந்த இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் இருவரும் சிகிச்சைக்காக தஞ்சையில் உள்ள இரண்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்