search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கார் கவிழ்ந்தது"

    • சிறுவன் ஒருவன் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது அவன் மீது மோதியது.
    • 4 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.

    கடலூர்:

    கடலூரில் இருந்து புதுச்சேரி நோக்கி ஒரு குடும்பத்தினர் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது கடலூர் அடுத்த சின்ன கங்கணாங்குப்பம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென்று கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக சாலையில் ஓடியது. அப்போது சாலை ஓரத்தில் இதில் சிறுவன் தூக்கி வீசப்பட்டார். பின்னர் சாலையில் இருந்த சிக்னல் கம்பத்தின் மீது மீண்டும் கார் மோதி சாலையில் ஓரத்தில் தலை குப்புற பயங்கர சட்டத்துடன் கார் கவிழ்ந்தது.

    இதனை பார்த்த பொதுமக்கள் கடும் அதிர்ச்சடைந்து தூக்கி வீசப்பட்ட மாணவனை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் காரில் இருந்த கணவன், மனைவி மற்றும் அவர்களது 2 பிள்ளைகளை காரில் இருந்து பாதுகாப்பாக பொதுமக்கள் மீட்டனர். இந்த விபத்தில் 4 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். இத்தகவல் அறிந்த ரெட்டிச்சாவடி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

    தஞ்சை அருகே தாறுமாறாக ஓடிய கார் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் சிறுவன் உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர். சுற்றுலா வந்தபோது இந்த விபத்து நடந்துள்ளது.

    தஞ்சாவூர்:

    சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்தவர் தியாகராஜன் (வயது 32). இவர் தஞ்சையில் உள்ள சுற்றுலா தலங்களை காண மகன் ஹர்‌ஷன்வர்தன்(10), உறவினர்கள் காஜித் குமார் (18), அனுபாமா (18) ஆகியோருடன் நேற்று சென்னையில் இருந்து ஒரு டிராவல்ஸ் காரில் தஞ்சைக்கு புறப்பட்டார். காரை ராமநாபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை சேர்ந்த டிரைவர் நெல்சன்(28) என்பவர் ஓட்டி வந்தார்.

    கார் தஞ்சை அடுத்த வளம்பக்குடி அருகே உள்ள பெரியார் சமத்துவபுரம் பகுதியில் நள்ளிரவில் வந்தபோது கார் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. அந்த நேரத்தில் எதிரே தஞ்சை நோக்கி சென்ற லாரியின் பின்பக்கம் கார் மோதி பின்னர் சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் தியாகராஜன் உள்பட 5 பேரும் காருக்கு அடியில் சிக்கி உயிருக்கு போராடினர். இவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து 5 பேரையும் மீட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து செங்கிப்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×