என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காய்ச்சலுக்கு ஊசி போட்டதில் தொழிலாளி உயிரிழப்பு- போலி டாக்டர் கைது
Byமாலை மலர்18 Feb 2020 3:28 AM GMT (Updated: 18 Feb 2020 5:35 AM GMT)
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே காய்ச்சலுக்கு ஊசி போட்டதில் தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தையடுத்து புகாரின் பேரில் போலி டாக்டரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள பாரதிபுரம் பட்டாலப்பள்ளியை சேர்ந்தவர் ராமன் (வயது 46). 12-ம் வகுப்பு படித்துள்ள இவர் காவேரிப்பட்டணம் அருகே உள்ள மோரனஅள்ளியில் கடந்த 2 ஆண்டுகளாக வாடகைக்கு அறை எடுத்து தங்கி அங்குள்ள மக்களுக்கு மருத்துவம் பார்த்து வருகிறார்.
இந்தநிலையில் அதே பகுதியை சேர்ந்த முனியம்மாள் தனது கணவரான கூலித்தொழிலாளி ஜெயவேல் (40) என்பவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதாக கூறி ராமனிடம் அழைத்து சென்றார். அங்கு ராமன், ஜெயவேலுக்கு கையில் உள்ள நரம்பில் ஊசி போட்டுள்ளார். ஆனால் ஊசி போட்ட சிறிது நேரத்தில் ஜெயவேல் மயக்கம் போட்டு விழுந்தார்.
இதைப் பார்த்து பதறி போன முனியம்மாள், ஜெயவேலை காவேரிப்பட்டணம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கார் மூலம் கொண்டு சென்றார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஜெயவேல் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து முனியம்மாள் அளித்த புகாரின் பேரில் போலி டாக்டர் ராமனை காவேரிப்பட்டணம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள பாரதிபுரம் பட்டாலப்பள்ளியை சேர்ந்தவர் ராமன் (வயது 46). 12-ம் வகுப்பு படித்துள்ள இவர் காவேரிப்பட்டணம் அருகே உள்ள மோரனஅள்ளியில் கடந்த 2 ஆண்டுகளாக வாடகைக்கு அறை எடுத்து தங்கி அங்குள்ள மக்களுக்கு மருத்துவம் பார்த்து வருகிறார்.
இந்தநிலையில் அதே பகுதியை சேர்ந்த முனியம்மாள் தனது கணவரான கூலித்தொழிலாளி ஜெயவேல் (40) என்பவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதாக கூறி ராமனிடம் அழைத்து சென்றார். அங்கு ராமன், ஜெயவேலுக்கு கையில் உள்ள நரம்பில் ஊசி போட்டுள்ளார். ஆனால் ஊசி போட்ட சிறிது நேரத்தில் ஜெயவேல் மயக்கம் போட்டு விழுந்தார்.
இதைப் பார்த்து பதறி போன முனியம்மாள், ஜெயவேலை காவேரிப்பட்டணம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கார் மூலம் கொண்டு சென்றார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஜெயவேல் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து முனியம்மாள் அளித்த புகாரின் பேரில் போலி டாக்டர் ராமனை காவேரிப்பட்டணம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X