search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலி டாக்டர் கைது"

    • ஜெயராமன் நோயாளிகளுக்கு சிகிச்சை பார்த்து மருந்து கொடுத்தது தெரியவந்தது.
    • வருவாய் துறை அலுவலர்கள் ஜெயராமன் நடத்தி வந்த கிளினிக்கை பூட்டி சீல் வைத்தனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள சிவகாமி புரத்தை சேர்ந்தவர் ஜீவா (வயது 35) என்ற பெண் ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார்.

    இவரது கணவர் ஜெயராமன்(38) டிப்ளமோ பார்மசி முடித்துள்ளார். இவர்களது கிளினிக் நெல்லை-தென்காசி நான்கு வழிச்சாலையில் சிவகாமிபுரம் விலக்கில் இயங்கி வந்தது.

    மருத்துவர் ஜீவா அரசு மருத்துவமனைக்கு பணிக்கு செல்லும் நேரங்களில் அவரது கணவர் ஜெயராமன் கிளினிக்கில் மருத்துவராக செயல்பட்டு வந்துள்ளார். பல நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்ததில் அவர்களுக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டு அவர்கள் மற்றொரு மருத்துவமனையில் சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளனர். இது குறித்து முதலமைச்சரின் தனி பிரிவிற்கு புகார் சென்றது

    அதன் பேரில் தென்காசி ஆர்.டி.ஓ. லாவண்யா, சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் பிரேமலதா, ஆலங்குளம் தாசில்தார் கிருஷ்ணவேல் ஆகியோர் கிளினிக்கில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அதில் ஜெயராமன் நோயாளிகளுக்கு சிகிச்சை பார்த்து மருந்து கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து பாவூர்சத்திரம் போலீசார் அவரை கைது செய்தனர்.

    மேலும் ஜெயராமன் கைது செய்யப்பட்ட நிலையில் தென்காசி மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் உத்தரவின் பெயரில் ஆர்.டி.ஓ. லாவண்யா, சுகாதாரத்துறை இணை இயக்குனர் பிரேமலதா மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் ஜெயராமன் நடத்தி வந்த கிளினிக்கை பூட்டி சீல் வைத்தனர்.

    • க்ளினிக்கில் சுகாதாரத்துறை இணை இயக்குநா் கனகராணி தலைமையிலான மருத்துவக் குழுவினர் திடீர் ஆய்வு செய்தனர்.
    • க்ளினிக்கிற்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள குண்டடம் தாசா்பட்டி பிரிவில் மருத்துவம் படிக்காத ஒருவா் க்ளினிக் நடத்தி வருவதாகவும், நோயாளிகளுக்கு அவா் ஊசி போடுவதுடன், ஆங்கில மருந்துகள் வழங்குவதாகவும் திருப்பூர் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநா் கனகராணிக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து, அந்த க்ளினிக்கில் சுகாதாரத்துறை இணை இயக்குநா் கனகராணி தலைமையிலான மருத்துவக் குழுவினர் திடீர் ஆய்வு செய்தனர். ஆய்வின்போது, தாசா்பட்டி பிரிவைச் சோ்ந்த தங்கராஜ் (41) என்பவா், மருத்துவம் பயிலாமல் க்ளினிக் நடத்தி வந்தது தெரியவந்தது.

    இதையடுத்து, சுகாதாரத்துறை இணை இயக்குநா் கனகராணி அளித்த புகாரின்பேரில் குண்டடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, போலி டாக்டா் தங்கராஜுவை கைது செய்தனா். மேலும் அந்த க்ளினிக்கிற்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

    • ஓமியோபதி படித்துவிட்டு ஆங்கில மருத்துவம் பார்த்தார்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    ராணிப்பேட்டை

    சோளிங்கர் அடுத்த பரவத் தூரில் ஒருவர் ஓமியோபதி படித்து ஆங்கில மருத்துவம் பார்ப்பதாக கலெக்டருக்கு புகார்கள் வந்தது.

    அதைத்தொ டர்ந்து கலெக்டர் உத்தரவின் பேரில் சோளிங்கர் அரசு மருத் துவமனை தலைமை மருத்துவர் பாஸ்கர், டாக்டர் கருணாகரன், மருந்தாளுனர் சேகர் ஆகியோர் பெரியவைலம்பாடி கிராமத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    அதில் பெரிய தெருவை சேர்ந்த விஜய் (வயது 29) என்பவர் ஓமியோபதி படித்துவிட்டு ஆங்கில மருத்துவம் பார்த்தது தெரியவந்தது.

    அதைத்தொடர்ந்து அங்கி ருந்த ஊசிகள் மற்றும் ஆங்கில மருந்துகளை பறிமுதல் செய்த னர். விஜயை சோளிங்கர் போலீஸ் நிலையத்தில் ஒப்ப டைத்தனர்.

    இது குறித்து சோளிங் கர் இன்ஸ்பெக்டர் பாரதி, சப்- இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விஜயை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீசார் திடீர் சோதனை
    • மருந்து, மாத்திரைகளை பறிமுதல்

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி தாலுக்கா போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனி மற்றும் வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரி டாக்டர். தன்வீர் உள்ளிட்ட குழுவினர் மதனஞ்சேரி பகுதியில் திடீர் சோதனை நடத்தினர்.

    அங்கு நாராயணபுரம் கிராமத்தைச் சேர்ந்த குகன் (வயது 26) என்பவர் மருத்துவம் படிக்காமல் அலோபதி சிகிச்சை அளிப்பது தெரிய வந்தது.

    இதனை தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த மருந்து, மாத்திரைகளை பறிமுதல் செய்யப்பட்டது.

    • பள்ளிப்படிப்பை மட்டும் முடித்துவிட்டு போலியாக ஆங்கில மருத்துவம் பார்த்து வருவது தெரிய வந்தது.
    • நத்தம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு போலீசார் முத்தையாவை கைது செய்தனர்.

    நத்தம்:

    திண்டுக்கல் மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குனர் பூமிநாதனுக்கு நத்தம் பகுதியில் போலி டாக்டர்கள் நடமாட்டம் அதிகம் இருப்பதாக ரகசிய தகவல் வந்தது. இதனைத் தொடர்ந்து அவரது தலைமையில் அதிகாரிகள் அதிரடியாக நத்தம் பகுதியில் ஆய்வு செய்தனர். அப்போது நத்தம் ஆண்டியப்பபிள்ளை தெருவில் கிளினிக் நடத்தி வந்த போலி டாக்டர் முத்தையாவிடம் விசாரித்தனர்.

    அப்போது பள்ளிப்படிப்பை மட்டும் முடித்துவிட்டு போலியாக ஆங்கில மருத்துவம் பார்த்து வருவது தெரிய வந்தது. இதையடுத்து நத்தம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு போலீசார் முத்தையாவை கைது செய்தனர்.

    மேலும் அவர் நடத்தி வந்த கிளினிக்கையும் வருவாய் துறையினர் சீல் வைத்தனர். அங்கு நோயாளிகளுக்கு வழங்குவதற்காக வைத்திருந்த மருந்து, மாத்திரைகள், ஊசி, குளுக்கோஸ் உள்ளிட்டவைகளை சுகாதாரத் துறையினர் பறிமுதல் செய்தனர்.

    சிறுகுடி, செந்துறை,கோட்டையூர்,பெரியூர்பட்டி, குட்டுப்பட்டி ஆகிய பகுதிகளில் போலி டாக்டர்கள் வீடு வீடாக சென்று மருத்துவம் பார்த்து வருவதாகவும், கூடுதல் பணம் வாங்குவதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே அதிகாரிகள் அப்பகுதியில் ஆய்வு செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மோசடியில் ஈடுபட்ட போலி டாக்டரை நேற்று இரவு தி.நகர் பகுதியில் உள்ள ஓட்டலில் போலீசார் கைது செய்தனர்.
    • ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர் போல நடித்து சிகிச்சைக்கு வந்த நபரிடம் 6பவுன் நகை மற்றும் பணத்தை சுருட்டி தப்பியதும் விசாரணையில் தெரியவந்தது.

    போரூர்:

    சென்னை, கீழ்ப்பாக்கம் பகுதியை சேர்ந்த ஒருவர் தான் டாக்டர் என்று கூறி கடந்த 8-ந்தேதி திருப்பதியில் உள்ள டிராவல்ஸ் நிறுவனத்தில் காரை முன்பதிவு செய்தார். இதைத்தொடர்ந்து டிரைவர் தினேஷ்குமார் என்பவர் காருடன் கீழ்ப்பாக்கம் பகுதிக்கு வந்து அந்த டிப்-டாப் நபரை காரில் அழைத்து சென்றார். அப்போது கோடம்பாக்கம் பகுதியில் உள்ள ஓட்டலில் அறை உள்ளது.மதுகுடித்துவிட்டு செல்லலாம் என்று கூறி டிரைவர் தினேஷ்குமாரை ஓட்டலில் உள்ள மதுபாருக்கு அழைத்து சென்றார். அங்கு நூதன முறையில் தினேஷ்குமாரிடம் இருந்து கூகுள்பே மூலம் ரூ.8 ஆயிரம் பணத்தை பெற்று அவரது செல்போனையும் டிப்-டாப் நபர் எடுத்து தப்பி சென்று விட்டார்.

    இதுகுறித்து டிரைவர் தினேஷ்குமார் கோடம்பாக்கம் போலீசில் புகார் அளித்தார். தி.நகர் உதவி கமிஷனர் பாரதிராஜா, கோடம்பாக்கம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜா, சப்-இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் தலைமையிலான தனிப்படை போலீசார் ஓட்டல் பாரில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து போலி டாக்டர் குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் மோசடியில் ஈடுபட்ட போலி டாக்டரை நேற்று இரவு தி.நகர் பகுதியில் உள்ள ஓட்டலில் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர் சஞ்சய் வர்மா என்பதும் டாக்டர் போல நடித்து டிராவல்ஸ் நிறுவனங்களில் கார்களை முன்பதிவு செய்து டிரைவர்களை குறிவைத்து பணம், செல்போன் ஆகியவற்றை பறித்து வருவதும் தெரியவந்தது.

    அவரிடம் ஏராளமான போலி அடையாள அட்டைகள் இருந்தன. ஒரு ஆதார் கார்டில் கேரளாமாநிலம் கண்ணூர் என்ற முகவரி இருந்தது. இதேபோல் போலி டாக்டர் சஞ்சய் வர்மா கடந்த மாதம் 29-ந் கார் டிரைவர் ஒருவரிடம் நூதன முறையில் ரூ.9ஆயிரம் பணத்தை பறித்து கொண்டு கள்ளநோட்டுகளை கொடுத்து தப்பி இருந்தார்.

    மேலும் ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர் போல நடித்து சிகிச்சைக்கு வந்த நபரிடம் 6பவுன் நகை மற்றும் பணத்தை சுருட்டி தப்பியதும் விசாரணையில் தெரியவந்தது. ஏற்கனவே கேரளா போலீசாரால் கைது செய்யப்பட்ட அவர் சிறையில் இருந்து வெளியே வந்ததும் மீண்டும் ஏராளமனோரிடம் மோசடியில் ஈடுபட்டு இருப்பது தெரிந்தது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கலாவதி என்பவர் தனது வீட்டிலேயே நோயாளிகளுக்கு ஊசி மருந்து செலுத்தி வந்தது தெரியவந்தது.
    • பள்ளி படிப்பை மட்டுமே படித்துமுடித்து விட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளார்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் கோபால்பட்டியில் உள்ள ஒரு வீட்டில் கிளினிக் செயல்படுவதாக மாவட்ட சுகாதார நலப்பணிகள் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் பூமிநாதன் தலைமையில் கொசவபட்டி வட்டார மருத்துவ அலுவலர் அசோக்குமார் ஆகியோர் அந்த கிளினிக்கில் ஆய்வு செய்தனர்.

    அப்போது கலாவதி என்பவர் தனது வீட்டிலேயே நோயாளிகளுக்கு ஊசி மருந்து செலுத்தி வந்தது தெரியவந்தது. மருத்துவ குழுவினரிடம் அவர் தன்னை டாக்டர் என்றே அறிமுகம் செய்து கொண்டார். அதன்பின்பு அதிகாரிகள் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் கலாவதி(45) என்பதும், பல வருடங்களாக கோபால்பட்டியில் தங்கி நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்ததும் தெரியவந்தது.

    இவர் பள்ளி படிப்பை மட்டுமே படித்துமுடித்து விட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளார். ஊசி மருந்து போட்டதுடன் காயங்களுக்கு கட்டு போட்டும், மருந்துகள் கொடுத்தும் வந்துள்ளார்.

    திண்டுக்கல் மாவட்டத்தில் கோபால்பட்டி, சாணார்பட்டி, சிறுமலை மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இதுபோன்ற போலி டாக்டர்கள் நடமாட்டம் அவ்வப்போது கண்டறியப்பட்டு அவர்களை கைது செய்து வருகின்றனர். கிளினிக் நடத்த வேண்டும் என்றால் முறையான படிப்பு முடித்து அரசால் அங்கீகாரம் பெற வேண்டும். ஆனால் இதுபோன்ற எந்த நடைமுறையும் பின்பற்றாமல் கிளினிக் நடத்துவதும், கிராமங்களுக்கு சென்றே சிகிச்சை அளிப்பதும் தொடர் கதையாகி வருகிறது.

    இதுகுறித்து மருத்துவத்துறை அதிகாரிகள் சாணார்பட்டி போலீசில் புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் சிராஜூதீன் தலைமையிலான போலீசார் அங்கு சென்று கலாவதியை கைது செய்ததுடன் கிளினிக்கையும் பூட்டி சீல் வைத்தனர். அவர் மருத்துவம் பார்த்ததன் மூலம் நோயாளிகளுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டதா என்பது குறித்தும் மருத்துவக்குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கோபிநாத் மாணவனுக்கு தவறுதலாக ஊசி போட்டதாக கூறப்படுகிறது.
    • போலி டாக்டர்களிடம் சிகிச்சை பெற வேண்டாம் என சுகாதாரத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    வாணியம்பாடி:

    திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த ஜொடாங்குட்டை கிராமத்தை சேர்ந்தவர் சக்கரவர்த்தி. இவரது மகன் சூரிய பிரகாஷ் (வயது 13) அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார்.

    நேற்று சூரிய பிரகாஷ் உடல் நலம் பாதிக்கப்பட்டது இதற்காக நாயனசெருவு பகுதியில் கிளினிக் நடத்தி வரும் கோபி என்பவரிடம் சிகிச்சை அளித்தனர். அப்போது கோபிநாத் மாணவனுக்கு தவறுதலாக ஊசி போட்டதாக கூறப்படுகிறது.

    வீட்டிற்கு சென்றதும் சிறுவன் சூரிய பிரகாசுக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. உடனே நாட்றம்பள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியில் சிறுவன் பரிதாபமாக இறந்தான்.

    இதனால் சிறுவனின் பெற்றோர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து திம்மாபேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    போலீசார் சிறுவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் ஊசி போடப்பட்டது குறித்து விசாரித்தனர். அப்போது கோபிநாத் போலி டாக்டர் என்பது தெரிய வந்தது.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து போலி டாக்டர் கோபிநாத்தை கைது செய்தனர்.

    இந்த சம்பவம் வாணியம்பாடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதனைத் தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்டத்தில் போலி டாக்டர்களை கண்டறிந்து கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    மாவட்டம் முழுவதும் போலி கிளினிக் நடத்துவது குறித்து பொதுமக்கள் தகவல் அளிக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

    மேலும் பொதுமக்கள் அரசு ஆஸ்பத்திரி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற வேண்டும். போலி டாக்டர்களிடம் சிகிச்சை பெற வேண்டாம் என சுகாதாரத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • மருத்துவ படிப்பு ஏதும் படிக்காமல் திலகவதி என்கிற பரிதபேகம் என்பவர் நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்தது கண்டுபிடிக்கப்பட்டது.
    • போலி பெண் டாக்டர் திலகவதி என்கிற பரிதபேகத்தை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் அருகே தாமல் கிராமத்தில் பெண் ஒருவர் மருத்துவ படிப்பு ஏதும் படிக்காமல், நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்து வருவதாக சுகாதார பணிகள் இணை இயக்குனர் அலுவலகத்திற்கு புகார்கள் வந்தது.

    புகார்களின்பேரில் காஞ்சிபுரம் மாவட்ட மருத்துவப் பணிகள் இணை இயக்குனர் டாக்டர் கோபிநாத் தலைமையிலான குழுவினர் தாமல் கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றனர்.

    அங்கு அவர்கள் நடத்திய சோதனையில் மருத்துவ படிப்பு ஏதும் படிக்காமல் திலகவதி என்கிற பரிதபேகம் (வயது 45) என்பவர் நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட மருத்துவப் பணிகள் இணை இயக்குனர் டாக்டர் கோபிநாத், பாலுச்செட்டி சத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார் போலி பெண் டாக்டர் திலகவதி என்கிற பரிதபேகத்தை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • பல கர்ப்பிணி பெண்களுக்கு கருக்கலைப்பு மாத்திரை கொடுத்து சிகிச்சை அளித்ததும் உறுதி செய்யப்பட்டது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து போலி டாக்டர் ராஜசேகரனை கைது செய்தனர்.

    மதுரை:

    மதுரை முரட்டான்பத்திரி பகுதியில் போலி டாக்டர் ஒருவர் வீட்டில் மருத்துவம் பார்த்து வருவதாக முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு புகார்கள் சென்றன. இதைத் தொடர்ந்து புகார் சம்பந்தமாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.

    அதன்பேரில் மருத்துவத் துறை இணை இயக்குநர் செல்வராஜ் தலைமையில் சோழவந்தான் அரசு ஆஸ்பத்திரி தலைமை மருத்துவர் இருசப்பன் மற்றும் மருந்து ஆய்வாளர்கள் அடங்கிய குழுவினர் முரட்டான்பத்திரி பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது புதுஜெயில் ரோடு மில் காலனியில் வசிக்கும் ராஜ சேகரன் (வயது 48) என்பவர் அந்த பகுதியில் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்தது தெரிய வந்தது.

    இதைத் தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். இதில் ராஜசேகரன் டாக்டருக்கு படிக்கவில்லை என்பதும், அவர் மதுரை நரிமேடு பகுதியில் செயல் பட்டு வரும் ஒரு ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை பிரிவில் மருத்துவ உதவியாளராக வேலை பார்த்து வந்தார் என்பதும், இந்த அனுபவத்தின் மூலம் அவர் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்ததும் தெரிய வந்தது.

    இதுமட்டுமின்றி அவர் பல கர்ப்பிணி பெண்களுக்கு கருக்கலைப்பு மாத்திரை கொடுத்து சிகிச்சை அளித்ததும் உறுதி செய்யப்பட்டது. இதுதொடர்பாக மருத்து வக்குழுவினர் கரிமேடு போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலி டாக்டர் ராஜசேகரனை கைது செய்தனர்.

    • சுகாதாரத்துறையினர் மற்றும் ஏர்வாடி போலீசார் கிருஷ்ணன் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.
    • விசாரணைக்கு பின் கிருஷ்ணன் நாங்குநேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    களக்காடு:

    நெல்லை மாவட்டம் ஏர்வாடி வடக்கு சேனையர் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது63). இவர் 8-ம் வகுப்பு வரை படித்துள்ளார். அதன்பின் பணகுடியில் உள்ள ஒரு மருந்து கடையில் வேலை பார்த்து வந்துள்ளார்.

    அதனைதொடர்ந்து கிருஷ்ணன் வீட்டில் இருந்தபடி பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்து வந்துள்ளார். இதுகுறித்து சுகாதாரத்துறைக்கு புகார்கள் வந்தது. அதன்பேரில் திருக்குறுங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அதிகாரி பிரியதர்ஷினி ஏர்வாடி போலீசில் புகார் செய்தார்.

    இதையடுத்து சுகாதாரத்துறையினர் மற்றும் ஏர்வாடி போலீசார் கிருஷ்ணன் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு ஏராளமான மாத்திரைகள், ஊசி மருந்துகள் இருப்பதும், அவர் அனுமதி இன்றி சட்ட விரோதமாக பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவ சிசிச்சை அளித்ததும் தெரியவந்தது.

    இதனைதொடர்ந்து கிருஷ்ணனை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து மருந்து, மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணைக்கு பின் அவர் நாங்குநேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    • பரமேஸ்வரன் மீது போலியாக மருத்துவம் பார்த்து வருவதாக வீராணம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது
    • மற்ற கிளினிக்குகளில் தொடர் சோதனை நடத்தப்படும் என, மருத்து கட்டுப்பாடு துறையினர் தெரிவித்தனர்.

    சேலம்:

    சேலம் வீராணம் அடுத்த பள்ளிப்பட்டியில் உள்ள தனியார் கிளினிக்கில் நேற்று சேலம் மாவட்ட சுகாதார நலப்பணிகள் இணை இயக்குனர் பானுமதி உத்தரவின்படி வேம்படிதாளம் அரசு மருத்துவமனை சித்தா உதவி டாக்டர் வெற்றிவேந்தன், மருந்துகள் ஆய்வாளர் மாரிமுத்து ஆகியோர் ஆய்வு செய்தனர்.

    அப்போது, மருந்தாளுனருக்கு படித்து விட்டு, கிளினிக் வைத்து நோயாளிகளுக்கு பரமேஸ்வரன் (வயது 41) என்பவர் அலோபதி சிகிச்சையளித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர் சிகிச்சைக்கு பயன்படுத்திய மருந்து, மாத்திரை, ஊசி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து, பரமேஸ்வரன் மீது போலியாக மருத்துவம் பார்த்து வருவதாக வீராணம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது

    அதன்பேரில் போலீசார், இந்திய மருத்துவ கவுன்சில், 1956-ன் கீழ் வழக்குப்பதிந்து, பரமேஸ்வரனை கைது செய்தனர். மேலும் அதே பகுதியில் உள்ள மற்ற கிளினிக்குகளில் தொடர் சோதனை நடத்தப்படும் என, மருத்து கட்டுப்பாடு துறையினர் தெரிவித்தனர்.

    ×