search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீரில் மூழ்கி பலி
    X
    நீரில் மூழ்கி பலி

    ஆவடி அருகே குளத்தில் மூழ்கி வாலிபர் பலி

    ஆவடி அருகே குளத்தில் மூழ்கி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆவடி:

    ஆவடியை அடுத்த முத்தா புதுபேட்டை மேலப்பேடு பெருமாள் கோவில் தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தவர் கோவிந்தராஜ் (வயது 29). கூலித்தொழிலளி. இவரது சொந்த ஊர் சென்னை மடிப்பாக்கம். இவருடன் விக்னேஷ், தங்கமணி ஆகிய இருவரும் அந்த அறையில் தங்கி இருந்து ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகின்றனர்.

    கடந்த சனிக்கிழமை வெளியே சென்ற கோவிந்த ராஜ் அதன் பிறகு வீட்டிற்கு திரும்பி வரவில்லை. அவரை உடன் தங்கி இருந்தவர்கள் தேடி வந்தனர்.

    இந்நிலையில் இன்று காலை மேலப்பேடு பகுதியில் உள்ள குளத்தில் கோவிந்த ராஜ் பிணமாக மிதந்தார். குளத்தில் இறங்கியபோது கோவிந்தராஜ் தண்ணீரில் மூழ்கி இறந்து இருப்பது தெரிந்தது.

    Next Story
    ×