search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
    X
    அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

    வேளாண் மண்டலம் தனி சட்டம் உருவாக்கி முதல்வர் சாதித்து காட்டுவார்- அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

    காவிரி சிறப்பு வேளாண் மண்டலத்திற்கு தனி சட்டம் உருவாக்கி முதல்வர் சாதித்து காட்டுவார் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.
    சென்னை:

    அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ஜெயலலிதா பேரவை சார்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை வெளியிட்டார்.

    காவிரி படுகையை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்து ஒட்டு மொத்த தமிழர்களின் நம்பிக்கையை நிறைவேற்றிக் காட்டி எல்லோரது பாராட்டையும் பெற்ற முதலமைச்சர் எடப்பாடியாரின் சாதனைகளை பொறுத்துகொள்ள முடியாமலும், ஏற்றுக்கொள்ள முடியாமலும், ஒத்துக்கொள்ள முடியாமலும் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் உளறி வருகிறார்.

    இதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். காவிரி படுகையை சிறப்பு வேளாண்மை மண்டலமாக உருவாக்க சட்ட வல்லுனர்களை வைத்து தேவையான தனி சட்டங்களை உருவாக்கி, பெற வேண்டிய இடங்களில் அனுமதியை பெற்று சாதித்து காட்டுவார் சாதனை நாயகன் அண்ணன் எடப்பாடியார் என்பதை தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.

    மேலும் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகன் என்கிற வாரிசு அரசியல் என்ற ஒற்றை தகுதியை மட்டும் தன் தகுதியாக வைத்துக் கொண்டு இன்றைக்கு தமிழினத்திற்கு தலைவனாக வேண்டும் என்று பேராசை வெறியோடு, பதவி நாற்காலிக்காக அலைந்து திரிகின்ற மனிதராக செயல்பட்டு வருவதையும் தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.

    மேலும் நல்லதை பாராட்ட மனமில்லாமல் போனாலும், அவதூறு செய்கின்ற, பழிசுமத்துகின்ற, குற்றம் காண்கின்ற குணத்தை இனிமேலாவது மாற்றிக்கொண்டால் தமிழக மக்கள் உங்களை மனிதராக மட்டுமாவது ஏற்றுக்கொள்வார்கள் என்பதை அம்மா பேரவை சார்பில் சுட்டி காட்டுகிறேன்.

    காவிரி படுகையை சிறப்பு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது ஏமாற்று வேலை என்று தொடர்ந்து பொய் பிரசாரத்தை திட்டமிட்டு மேற்கொண்டு வரும் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அம்மா பேரவை கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது.

    ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவர் என்ற இலக்கணத்தை மறந்து பொது நலத்தை துறந்து சுய நல உச்சத்திற்கு சென்றுள்ளதை அவரின் அவதூறு பிரச்சாரம் எடுத்துக்காட்டுகிறது.

    நாட்டு நலனையோ, விவசாயிகள் மீது அக்கறையோ, தமிழ்நாட்டு மக்களின் வளர்ச்சிக்கான முயற்சியோ தங்களிடம் அறவே இல்லை என்பதை மட்டுமே தங்களின் பொய்ப்பிரசாரம் எடுத்து காட்டுகிறது என்பதை மீண்டும் சுட்டி காட்டுகிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
    Next Story
    ×