search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைச்சர் ஆர்பி உதயகுமார்"

    பாராளுமன்ற தேர்தலில் தினகரனுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பரிசு பெட்டி சின்னமானது காலி பெருங்காய டப்பா என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசினார். #LokSabhaElections2019 #ADMK #RBUdhayakumar
    மதுரை:

    தேனி பாராளுமன்ற அ.தி.மு.க. வேட்பாளர் ரவீந்திரநாத்குமார் உசிலம்பட்டி பகுதிகளில் இன்று கிராமம், கிராமமாக சென்று ஆதரவு திரட்டி பிரசாரம் செய்தார்.

    அவருடன் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், நீதிபதி எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. முத்துராமலிங்கம் உள்ளிட்ட ஏராளமானோர் உடன் சென்றனர். அப்போது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:-

    அ.தி.மு.க. அரசு மக்களுக்கு செய்துள்ள சாதனைகளை எடுத்துக்கூறி மக்களிடம் வாக்கு சேகரித்து வருகிறது. ஆனால் தி.மு.க.வினர் தனி நபர் விமர்சனம் செய்து ஓட்டு கேட்கிறார்கள். இதனை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

    ஜெயலலிதா மீது வழக்குகளை போட்டு தொல்லை கொடுத்த தி.மு.க.வினர் இப்போது ஜெயலலிதா மீது பரிதாபம் காட்டுகிறார்கள்.

    மு.க.ஸ்டாலின், ஜெயலலிதா மரணத்தை வைத்து அரசியல் நடத்த பார்க்கிறார். அ.தி.மு.க.வை அழிக்கப்போவதாக கூறிய டி.டி.வி. தினகரன் வருகிற பாராளுமன்ற தேர்தலோடு காணாமல் போய் விடுவார். அவருக்கு “பரிசு பெட்டி” சின்னம் கிடைத்துள்ளது. அந்த பரிசு பெட்டி காலி பெருங்காய டப்பா. அது தோற்கிற சின்னம். இரட்டை இலை சின்னம் தான் வெற்றி மகுடம் சூடும் சின்னமாகும்.

    எனவே தேனி பாராளுமன்றத்தில் அ.தி.மு.க. பெறும் வெற்றி டெல்லியில் எதிரொலிக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார். #LokSabhaElections2019 #ADMK #RBUdhayakumar
    ஆட்சியை பிடித்துவிடலாம் என்ற மு.க. ஸ்டாலினின் கனவு பலிக்காது என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். #Ministerrbudayakumar

    பேரையூர்:

    அ.தி.மு.க. அரசின் சாதனைகளை பொது மக்களுக்கு விளக்கும் வகையில் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள சுப்புலாபுரத்தில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தலைமையில் இன்று சைக்கிள் பேரணி நடந்தது.

    இதனை தொடங்கி வைத்த அமைச்சர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பறிபோன நாற்காலிகளை பிடிப்பதற்காகவே நாற்காலி இல்லாத கிராம சபை கூட்டம் நடத்துகிறார் ஸ்டாலின். மாவட்டக் கூட்டம் நடத்தினாலே கூட்டம் கூடாது என்ற காரணத்தினால் கிராமம் கிராமாக மக்களை சந்தித்து வருகிறார்.

    நின்று கொண்டு சொன்னாலும் சரி, உட்கார்ந்து மட்டும் அல்ல தலைகீழாக நின்றாலும் ஸ்டாலின் பேச்சு எடுபடாது.

    தினகரன் தனது பலத்தை இழந்து வருகிறார். எனவே ஆட்கள் சேர்ப்பதற்காக ஏதாவது கூறிக்கொண்டு வருகிறார்.

    கஜா புயலுக்காக 2,300 கோடியில் மத்திய அரசு 1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. அது தவிர தமிழக அரசு 1000 கோடி ஒதுக்கீடு செய்து 90 சதவீதம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் வீடுகள் வழங்கப்பட்டுள்ளது.

    கஜா புயலில் வழங்கப்பட்ட நிவாரணம் புள்ளி விவரங்களாக கொடுக்கப்பட்டுள்ளது. விவசாயத்திற்கான நிவாரண தொகை கணக்கீடு செய்து வழங்கப்பட்டு வருகிறது. தவறான தகவலை பரப்பி வருகின்றனர்.

    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும் என ஸ்டாலின் 1 லட்சத்து 11 ஆயிரம் முறை கூறி விட்டார். அவர் கனவு நிறைவேறாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கஜா புயல் நிவாரணத்துக்கு மத்திய அரசு ஒரு ரூபாய் கூட வழங்கவில்லை என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டினார். #MinisterUdhayaKumar #GajaCyclone #GajaCycloneRelief
    மதுரை:

    மதுரை திருமங்கலத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக அரசு ‘கஜா’ புயல் பாதித்த டெல்டா மாவட்ட மக்களுக்கு ரூ.1,400 கோடி வழங்கி உள்ளது. அத்துடன் 29 பொருட்கள் அடங்கிய பெட்டகமும் வழங்கியது. ஆனால் தற்போது வரை புயல் பாதிப்புக்கு மத்திய அரசு ஒரு ரூபாய் கூட நிதி வழங்கவில்லை. தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையைத்தான் வழங்கி உள்ளது.

    முதல்-அமைச்சர், அமைச்சர்கள் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரடியாக சென்று மக்களுக்கு ஆறுதல் கூறினர். ஆனால் ஸ்டாலின் ஒருநாள் சென்று பார்வையிட்டு புயல் நிவாரண பணிகள் குறித்து விமர்சனம் செய்கிறார்.



    மாணவர்களுக்கு வழங்கப்படும் விலையில்லா சைக்கிள் கர்நாடக அரசால் நிராகரிக்கப்பட்டது என்று புரளி கிளப்புகின்றனர். கர்நாடக மாநில அரசு வழங்கும் சைக்கிள் வண்ணம் வேறு, தமிழக அரசு வழங்கும் சைக்கிள் வண்ணம் வேறு. தமிழக அரசு வழங்கும் சைக்கிள் தரமானது.

    காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணை மற்றும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு ஆகியவற்றை மீறும் வகையில் காவிரி படுகையில் மேகதாது அல்லது வேறு எந்த ஒரு இடத்திலும் தமிழ்நாட்டின் இசைவின்றி எந்த ஒரு கட்டுமான பணிகளும் மேற்கொள்ளக்கூடாது என்று கர்நாடக அரசுக்கு, மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என தமிழக சட்டசபையில் வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. எனவே மேகதாது உள்பட காவிரி படுகையில் எந்த அணையும் கர்நாடகம் கட்ட முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.  #MinisterUdhayaKumar #GajaCyclone #GajaCycloneRelief
    ஜெயலலிதா பற்றி விமர்சனம் செய்தது தொடர்பாக டிடிவி தினகரன் மன்னிப்பு கேட்க வேண்டும் என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியுள்ளார். #ADMK #MinisterUdhayakumar #TTVDinakaran
    மதுரை:

    அமைச்சர் உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அரசியல் பண்பாடு இல்லாமல் அமைச்சர்களை பட்டப்பெயர் சூட்டி இழிவாக, மலிவாக பேசி வந்த தினகரன் தான் ஏதோ மன்னர் பரம்பரையில் இருந்து வந்தது போல நினைத்துக் கொண்டு முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோரை தொடங்கி அம்மாவால் அரசியலில் வளர்த்து எடுக்கப்பட்டவர்களை தரம் தாழ்ந்து தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.

    தனி நபர் தாக்குதல், மிரட்டல் போன்றவற்றையே பொழுதெல்லாம் கடைப்பிடிக்கும் தினகரன் இவற்றை எல்லாம் அவர் சென்று வந்த சென்னை மத்திய சிறை, கடலூர் சிறை, திகார் சிறை போன்ற இடங்களில் கற்றுக்கொண்ட பண்பாக இருக்கலாம்.

    ஆனால் புரட்சித் தலைவரையும், புரட்சித் தலைவியையும் பின்பற்றி நடக்கக்கூடிய நாங்கள் அத்தகைய இழிவான அரசியலை என்றைக்கும் மேற்கொண்டது இல்லை.

    இந்நிலையில் பசும்பொன் தேவர் திருமகனாரின் குருபூஜைக்கு சென்று வந்த தினகரன் அந்த புண்ணிய திருத்தலத்தில் கேவலமான அரசியல் யுக்தியை கையில் எடுத்து அங்கு வைக்கப்பட்ட பேனர்களை அடித்து நொறுக்கி கிழிக்க வைத்து அதனை ரசித்தார் என்றால் தினகரனின் வக்கிர புத்திக்கு இதுவே சான்று ஆகும்.

    மக்கள் முகம் சுளிக்கும் அந்தகாரியத்தை செய்து விட்டு அதனை பொதுமக்களின் மீதுபழி போட்டது தினகரனின் கிரிமினல் தனத்திற்கு சாட்சியாகும். இப்படி அரசியலில் அடிப்படை நாகரித்தையே சிதைக்கிற வேலையில் ஈடுபட்டு வருபவர் அவ்வப்போது அவர் அம்மாவின் மீதுகொண்டு இருக்கும் காழ்ப்புணர்ச்சியையும் வெளிகாட்டி வருகிறார்.

    தினகரன் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசும் போது அம்மாவின் புனித பெயரால் வரும் நமது அம்மா நாளேட்டை நமது பாட்டி, நமது கொள்ளு பாட்டி என்று எல்லாம் அடை மொழி போட்டு அவர் அம்மாவின் மீது இருக்கும் எரிச்சலை வெளிப்படுத்தி இருக்கிறார்.

    அது மட்டுமல்லாது அம்மாவை அவமரியாதை செய்துள்ளார். அவர் பயன்படுத்திய சொற்களுக்குகாக டி.டி.வி.தினகரன் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #MinisterUdhayakumar #TTVDinakaran
    தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்களை பலிகடா ஆக்கிவிட்டு இரட்டை குதிரையில் தினகரன் சவாரி செய்வதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம் சாட்டினார். #RBUdayakumar #TTVDhinakaran
    மதுரை:

    மதுரையில் இன்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இன்றைக்கு தமிழக அரசியலில் இதுவரை நடைபெறாத சம்பவமாக தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்கள் பலிகடா ஆக்கப்பட்டுள்ளனர். இதற்கு காரணம் டி.டி.வி. தினகரன் என்ற தனி மனிதனின் பதவி ஆசையும், சுயநலமும் தான்.

    ஆர்.கே.நகரில் வெற்றி பெற்று விட்டோம் என்ற ஆணவத்தில் தினகரன் செயல்பட்டு வருகிறார்.

    அறந்தாங்கி தொகுதியில் திருநாவுக்கரசரும், சேலத்தில் செம்மலையும் சுயேட்சையாக வெற்றி பெற்றிருக்கிறார்கள். அப்படி சுயேட்சையாக வெற்றி பெற்று விட்டால் யாரும் தலைவராக வந்து விட முடியாது.

    ஏதோ ஒட்டுமொத்த தமிழகத்தின் தலைவராக தினகரன் நினைத்துக் கொண்டு தலைக்கனம் பிடித்து அலைகிறார்.

    அவருக்கு கட்சி இல்லை. கொள்கை இல்லை, லட்சியம் இல்லை, நிரந்தர சின்னம் இல்லை. அவரது இயக்கம் தேர்தல் கமி‌ஷனில் பதிவு செய்யப்படக்கூடவில்லை. மக்கள் செல்வாக்கும், தொண்டர்கள் செல்வாக்கும் அவருக்கு கிடையாது.

    டி.டி.வி.தினகரன் போன்ற தனி நபரை முன்னிலைப்படுத்தி அரசியல் களேபரம் நடந்து கொண்டிருக்கிறது. தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்கம் செல்லும் என்று சென்னை ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பு இறைவன் வழங்கிய வரலாற்று தீர்ப்பு.

    கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற கதை போல் தன்னை சுற்றியுள்ளவர்களை திருப்திபடுத்துவதற்காக மேல்முறையீடு என்கிறார். தேர்தலை சந்திப்போம் என்கிறார்.



    இப்படி இரட்டை குதிரையில் சவாரி செய்வதற்கு தினகரன் நினைப்பது இதுவரை தமிழக அரசியல் வரலாற்றில் நடந்தது இல்லை.

    மறைந்த முதல்வர் ஜெயலலிதா உயிர் தியாகத்தால் வந்த பதவிகளை இழந்துவிட்டு இன்றைக்கு சுயநலத்தின் பிடியில் எனது சகோதரர்கள் மனம் விம்மிக் கொண்டிருக்கிறார்கள். சேராத இடத்தில் சேர்ந்து இழக்கக்கூடாததை இழந்து நிற்கிறார்கள்.

    தினகரனின் முகம் களையிழந்து விட்டது. தடுமாறி நிற்கிறது. ஜெயலலிதாவுக்கு ராஜ துரோகம் செய்தவர் தினகரன்.

    கடைசி வரை ஜெயலலிதாவால் விரட்டியடிக்கப்பட்டவர். எனவே அவரை நம்பி செல்பவர்களை ஜெயலலிதாவின் ஆன்மா ஒருபோதும் மன்னிக்காது.

    இவ்வாறு அவர் கூறினார். #RBUdayakumar #TTVDhinakaran

    அலங்காநல்லூரில் ரூ.3.50 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்.

    அலங்கநல்லூர்:

    அலங்காநல்லூரில் சோழவந்தான் சட்டமன்ற தொகுதி அளவிலான 650 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் ரூ.3கோடியே 50 லட்சம் மதிப்பில் வழங்கும் விழா நடந்தது.

    மாணிக்கம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். கோட்டாட்சியர் அரவிந்தன், தாசில்தார் பார்த்தீபன், முன்னிலை வகித்தனர்.

    வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள், முதியோர் உதவிகள், பசுமைவீடு திட்டங்கள், மற்றும் தோட்டகலை மூலம் மரக்கன்றுகள் உள்ளிட்ட பல்வேறு நலதிட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

    விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ.தமிழரசன், ஜெயசந்திரமணியன், மற்றும் ஊரக வளர்ச்சி, வருவாய்துறை அலுவலர்கள் அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    முன்னதாக அமைச்சரும், எம்,எல்,ஏவும், சைக்கிள் பேரணியில் கலந்து கொண்டு சைக்கிள் ஓட்டிவந்தனர். இந்த ஊர்வலம் அழகர் கோவிலில் இருந்து தொடங்கி அலங்காநல்லூர் வழியாக அய்யங்கோட்டை சென்றடைந்தது. இதில் 1500 சைக்கிள்களில் அ.தி.மு.க.வினர் அரசின் சாதனைகளை விளக்கி துண்டு பிரசுரங்களை வழங்கி சென்றனர்.

    அலங்காநல்லூர் கேட்டு கடையில் எம்.எல்.ஏ. தலைமையில் அமைச்சருக்கு வரவேற்பு கொடுக்கப்பட்டது.

    மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க 262 ஏக்கர் நிலம் தர தயார் என்று வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.
    மதுரை:

    எய்ம்ஸ் மருத்துவமனை மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்த தோப்பூரில் அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தை, மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் நேற்று பார்வையிட்டார்.

    பின்னர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    எய்ம்ஸ் மருத்துவமனையை தமிழகத்திற்கு கொண்டு வரவேண்டும் என்று முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடுமையான முயற்சி மேற்கொண்டார். அவர் சட்டமன்றத்தில் 110 விதியின்கீழ் எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைக்கப்படும் என்று அறிவித்தார். அது தவிர திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தலிலும் எய்ம்ஸ் மருத்துவமனை திருப்பரங்குன்றம் தொகுதியில் அமைக்கப்படும் என்று வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன.

    எட்டாக்கனியாக இருந்த எய்ம்ஸ் மருத்துவமனையை தென்மாவட்ட மக்களின் இதயக்கனியாக மதுரையில் அமைய உத்தரவு பெற்றுத் தந்துள்ள தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் என்றென்றும் தமிழக மக்கள் கடமைப்பட்டு உள்ளனர்.

    திருப்பரங்குன்றம் தொகுதிக்கு உட்பட்ட தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய 200 ஏக்கர் நிலம் மட்டுமின்றி, கூடுதலாக விரிவாக்கம் செய்ய வசதியாக 62 ஏக்கர் நிலம் என மொத்தம் 262 ஏக்கர் நிலம் தர அரசு தயார் நிலையில் உள்ளது.

    அதனை அளந்து செம்மைப்படுத்தி வருவாய்த்துறையினர் சார்பில் ஒப்படைக்கும் பணிகளின் தொடக்கமாக இன்றே பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன. அது தவிர நான்கு வழிச்சாலையை ஒட்டி புதிய இணைப்புச்சாலை, குடிநீர் வசதி, மின்சாரம் என மத்திய அரசு தெரிவித்துள்ள அனைத்து வசதிகளும் இங்கு உள்ளன. எனவே மதுரை-கன்னியாகுமரி நான்கு வழிச்சாலைக்கு மிக அருகே, மதுரை சர்வதேச விமான நிலையத்திற்கு 15 கி.மீ. தொலைவில், மதுரை ரெயில் நிலையத்திற்கு 14 கி.மீ தொலைவில் என அனைத்து வசதிகளும் உள்ள இந்த இடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதால் 19 மாவட்ட மக்கள் பயனடைவார்கள்.

    ஏற்கனவே மருத்துவ நகரமாக விளங்கும் மதுரையில் அமைந்துள்ள ராஜாஜி அரசு ஆஸ்பத்திரியில் ஆண்டிற்கு 29 லட்சம் வெளிநோயாளிகளும், 19 லட்சம் உள்நோயாளிகளும் பயன் பெற்று வருகிறார்கள். இதற்கெல்லாம் மணி மகுடமாக இந்த எய்ம்ஸ் மருத்துவமனை மூலம் உயர்தர சிகிச்சை 19 மாவட்டங்களை சேர்ந்த ஏழை முதல் பணக்காரர்கள் வரை அனைவருக்கும் கிடைக்க இருக்கிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×