என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இரட்டை குதிரையில் சவாரி செய்கிறார் தினகரன் - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
Byமாலை மலர்27 Oct 2018 7:53 AM GMT (Updated: 27 Oct 2018 7:53 AM GMT)
தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்களை பலிகடா ஆக்கிவிட்டு இரட்டை குதிரையில் தினகரன் சவாரி செய்வதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம் சாட்டினார். #RBUdayakumar #TTVDhinakaran
மதுரை:
மதுரையில் இன்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
இன்றைக்கு தமிழக அரசியலில் இதுவரை நடைபெறாத சம்பவமாக தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்கள் பலிகடா ஆக்கப்பட்டுள்ளனர். இதற்கு காரணம் டி.டி.வி. தினகரன் என்ற தனி மனிதனின் பதவி ஆசையும், சுயநலமும் தான்.
ஆர்.கே.நகரில் வெற்றி பெற்று விட்டோம் என்ற ஆணவத்தில் தினகரன் செயல்பட்டு வருகிறார்.
அறந்தாங்கி தொகுதியில் திருநாவுக்கரசரும், சேலத்தில் செம்மலையும் சுயேட்சையாக வெற்றி பெற்றிருக்கிறார்கள். அப்படி சுயேட்சையாக வெற்றி பெற்று விட்டால் யாரும் தலைவராக வந்து விட முடியாது.
ஏதோ ஒட்டுமொத்த தமிழகத்தின் தலைவராக தினகரன் நினைத்துக் கொண்டு தலைக்கனம் பிடித்து அலைகிறார்.
அவருக்கு கட்சி இல்லை. கொள்கை இல்லை, லட்சியம் இல்லை, நிரந்தர சின்னம் இல்லை. அவரது இயக்கம் தேர்தல் கமிஷனில் பதிவு செய்யப்படக்கூடவில்லை. மக்கள் செல்வாக்கும், தொண்டர்கள் செல்வாக்கும் அவருக்கு கிடையாது.
டி.டி.வி.தினகரன் போன்ற தனி நபரை முன்னிலைப்படுத்தி அரசியல் களேபரம் நடந்து கொண்டிருக்கிறது. தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்கம் செல்லும் என்று சென்னை ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பு இறைவன் வழங்கிய வரலாற்று தீர்ப்பு.
இப்படி இரட்டை குதிரையில் சவாரி செய்வதற்கு தினகரன் நினைப்பது இதுவரை தமிழக அரசியல் வரலாற்றில் நடந்தது இல்லை.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா உயிர் தியாகத்தால் வந்த பதவிகளை இழந்துவிட்டு இன்றைக்கு சுயநலத்தின் பிடியில் எனது சகோதரர்கள் மனம் விம்மிக் கொண்டிருக்கிறார்கள். சேராத இடத்தில் சேர்ந்து இழக்கக்கூடாததை இழந்து நிற்கிறார்கள்.
தினகரனின் முகம் களையிழந்து விட்டது. தடுமாறி நிற்கிறது. ஜெயலலிதாவுக்கு ராஜ துரோகம் செய்தவர் தினகரன்.
கடைசி வரை ஜெயலலிதாவால் விரட்டியடிக்கப்பட்டவர். எனவே அவரை நம்பி செல்பவர்களை ஜெயலலிதாவின் ஆன்மா ஒருபோதும் மன்னிக்காது.
இவ்வாறு அவர் கூறினார். #RBUdayakumar #TTVDhinakaran
மதுரையில் இன்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
இன்றைக்கு தமிழக அரசியலில் இதுவரை நடைபெறாத சம்பவமாக தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்கள் பலிகடா ஆக்கப்பட்டுள்ளனர். இதற்கு காரணம் டி.டி.வி. தினகரன் என்ற தனி மனிதனின் பதவி ஆசையும், சுயநலமும் தான்.
ஆர்.கே.நகரில் வெற்றி பெற்று விட்டோம் என்ற ஆணவத்தில் தினகரன் செயல்பட்டு வருகிறார்.
அறந்தாங்கி தொகுதியில் திருநாவுக்கரசரும், சேலத்தில் செம்மலையும் சுயேட்சையாக வெற்றி பெற்றிருக்கிறார்கள். அப்படி சுயேட்சையாக வெற்றி பெற்று விட்டால் யாரும் தலைவராக வந்து விட முடியாது.
ஏதோ ஒட்டுமொத்த தமிழகத்தின் தலைவராக தினகரன் நினைத்துக் கொண்டு தலைக்கனம் பிடித்து அலைகிறார்.
அவருக்கு கட்சி இல்லை. கொள்கை இல்லை, லட்சியம் இல்லை, நிரந்தர சின்னம் இல்லை. அவரது இயக்கம் தேர்தல் கமிஷனில் பதிவு செய்யப்படக்கூடவில்லை. மக்கள் செல்வாக்கும், தொண்டர்கள் செல்வாக்கும் அவருக்கு கிடையாது.
டி.டி.வி.தினகரன் போன்ற தனி நபரை முன்னிலைப்படுத்தி அரசியல் களேபரம் நடந்து கொண்டிருக்கிறது. தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்கம் செல்லும் என்று சென்னை ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பு இறைவன் வழங்கிய வரலாற்று தீர்ப்பு.
கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற கதை போல் தன்னை சுற்றியுள்ளவர்களை திருப்திபடுத்துவதற்காக மேல்முறையீடு என்கிறார். தேர்தலை சந்திப்போம் என்கிறார்.
இப்படி இரட்டை குதிரையில் சவாரி செய்வதற்கு தினகரன் நினைப்பது இதுவரை தமிழக அரசியல் வரலாற்றில் நடந்தது இல்லை.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா உயிர் தியாகத்தால் வந்த பதவிகளை இழந்துவிட்டு இன்றைக்கு சுயநலத்தின் பிடியில் எனது சகோதரர்கள் மனம் விம்மிக் கொண்டிருக்கிறார்கள். சேராத இடத்தில் சேர்ந்து இழக்கக்கூடாததை இழந்து நிற்கிறார்கள்.
தினகரனின் முகம் களையிழந்து விட்டது. தடுமாறி நிற்கிறது. ஜெயலலிதாவுக்கு ராஜ துரோகம் செய்தவர் தினகரன்.
கடைசி வரை ஜெயலலிதாவால் விரட்டியடிக்கப்பட்டவர். எனவே அவரை நம்பி செல்பவர்களை ஜெயலலிதாவின் ஆன்மா ஒருபோதும் மன்னிக்காது.
இவ்வாறு அவர் கூறினார். #RBUdayakumar #TTVDhinakaran
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X