என் மலர்
நீங்கள் தேடியது "RB Udhaya Kumar"
- மக்களை பாதுகாக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் இருக்கிறது.
- பேச வேண்டியவர்கள் பேசினால்தான் அனைத்தும் நடக்கும்.
மதுரையில் த.வெ.க. கூட்டணி குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பதில் அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாடு சட்டமன்றத்தில் அதிமுக பிரதான எதிர்க்கட்சி. சட்டப்பூர்வமான பிரதான எதிர்க்கட்சி.
முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி இருந்தார். 43 தொகுதிகளில் 1,92,000 வாக்குகள் தான் பின்னடைவு. இப்படி தான் ஆட்சி மாற்றம் நிகழ்ந்ததே தவிர,
ஐந்தரை கோடி வாக்காளர்களில் ஒரு லட்சத்து 92 ஆயிரம் வாக்காளர்கள் அதிமுக கூட்டணிக்கு கிடைத்திருந்தால், எந்த உள்குத்தும், வெளிகுத்தும், ஊமைகுத்தும் இல்லாமல் இருந்திருந்தால், நாங்கள் எல்லோரும் ஜெயிச்சிருப்போம்.
உள்குத்து, ஊமைக்குத்து என்றால் என்ன என்று கேட்காதீர்கள். அது வாங்கியவர்களுக்கு மட்டும்தான் தெரியும்.
இது ஒரு பருவமழை காலம். மக்களை பாதுகாக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் இருக்கிறது. பிப்ரவரி, மார்ச் மாதத்திற்கு பிறகு கூட்டம் குறித்து கேள்வி கேளுங்கள். அப்போது சொல்கிறோம்.
நான் சொல்லியோ.. நீங்கள் சொல்லியோ ஒன்றும் நடக்காது. பேச வேண்டியவர்கள் பேசினால்தான் அனைத்தும் நடக்கும். நல்லதே நடக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அ.தி.மு.க. எடப்பாடி பழனிசாமியின் கையில் தான் உள்ளது.
- தி.மு.க. ஆட்சி வரக்கூடாது, இதுதான் மக்கள் எண்ணமாகும்.
மதுரை:
ஆவணி அமாவாசை முன்னிட்டு மதுரை முக்தீஸ்வரர் கோவிலில் அன்னதானம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அடுத்த மாதம் முதல் வாரத்தில் மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டத்திற்கு எழுச்சிப் பயணம் மேற்கொள்ள இருக்கிறார். கட்சி தொடங்கியவர்கள் மாநாடு நடத்தலாம், ஆனால் மாநாட்டில் என்ன பேச வேண்டும் என்ற வரைமுறை உள்ளது. அ.தி.மு.க. மக்களுக்காக சேவை செய்யும் இயக்கமாகும்.
மாநாட்டில் விஜய், தி.மு.க.வை பாய்சன் என்று கூறுகிறார், போன மாநாட்டில் பாயசம் என்று கூறினார், அடுத்த மாநாட்டில் அமுது என்று கூட பேசுவார். தி.மு.க. தீய சக்தியை அப்புறப்படுத்த வேண்டும் என்று அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர். தொடங்கினார்.
அ.தி.மு.க. எடப்பாடி பழனிசாமியின் கையில் தான் உள்ளது. இதில் விஜய்க்கு சந்தேகம் வேண்டாம். கடந்த சட்டமன்றத் தேர்தல், பாராளுமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமியை வைத்து தான் தேர்தலை சந்தித்தோம். 2026 சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தான் முதலமைச்சர் வேட்பாளர். இன்றைக்கு தேசியக் கட்சியில் உள்ள அமித்ஷாவே எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் வேட்பாளர் என்று அறிவித்துவிட்டார். இதுதான் கள நிலவரம், இதில் விஜய்க்கு எந்த சந்தேகம் வேண்டாம்.
விஜய் வாய்க்கு வந்ததை வந்ததை பேசி வருகிறார். இதனால் அவருக்கு தான் பின்னடைவே தவிர எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை. இன்றைக்கு அ.தி.மு.க. தொண்டர்கள் வேதனையாக உள்ளார்கள் என்று கூறுகிறார். விஜய்க்கு எப்படி தெரியும், உங்களிடத்தில் எந்த தொண்டர்களாவது கூறினார்களா? அ.தி.மு.க.வின் வாக்கு வங்கியை யாரும் சிதைக்க முடியாது, ராணுவ கட்டுப்பாட்டுடன் உள்ளது. அ.தி.மு.க. பற்றி விஜய் கவலைப்பட வேண்டாம், தனது தொண்டர்கள் பற்றி கவலைப்பட வேண்டும்.
அ.தி.மு.க., பா.ஜ.க. பொருந்தாத கூட்டணி என்று கூறுகிறார். மக்கள் ஏற்றுக்கொண்ட கூட்டணியாக அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி உள்ளது. தி.மு.க.வை வீழ்த்த வேண்டும் என்றால் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறார்.
பா.ஜ.க., சீமான், விஜய், பா.ம.க., தே.மு.தி.க., போன்ற கட்சிகள் எல்லாம் தி.மு.க.வை எதிர்த்து வருகிறது. இன்றைக்கு தி.மு.க.விற்கு 65 சதவீதம் எதிர்ப்பு உள்ளது, ஆதரவு 35 சதவீதம் தான் உள்ளது. தி.மு.க. ஆட்சி வரக்கூடாது, இதுதான் மக்கள் எண்ணமாகும்
தொண்டர்கள் பேச்சைக் கேட்டால் தான் தலைவராக நிலைத்து நிற்க முடியும், அப்போது தான் தொண்டர்கள் ஆதரவு அளிப்பார்கள். விஜய் தொண்டர்களின் உழைப்பை சிதைக்க வேண்டாம். தமிழகத்தில் தி.மு.க.விற்கும், அ.தி.மு.க.விற்கும் தான் போட்டி இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- அண்ணாவையும், எம்.ஜி.ஆரையும் தவிர்த்து தமிழ்நாட்டில் அரசியல் செய்ய முடியாது.
- விஜயின் விமர்சன பேச்சுக்களை அ.தி.மு.க. தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
மதுரையில் த.வெ.க.வின் 2-வது மாநில மாநாடு நேற்று நடந்தது. திரளான தொண்டர்கள் பங்கேற்ற மாநாட்டில் கட்சி தலைவர் விஜய் பேசும்போது, '2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க. - த.வெ.க. இடையேதான் போட்டி' என்று தெரிவித்தார்.
நாமும் பா.ஜ.க.வுடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எதற்கு கூட்டணி வைக்க வேண்டும்?. அவர்களுடன் கூட்டணி வைக்க நம்ம என்ன மிகப்பெரிய ஊழல் கட்சியா?.
த.வெ.க. என்பது மகத்தான வெகுஜன மக்கள் படை. நமது தலைமையில் அமைக்கப்போகிற மக்கள் ஆட்சிக்காக, இந்த அடிமை கூட்டணியில் நாம் ஏன் சேர வேண்டும்?.
ஒரு பக்கம் ஆர்.எஸ்.எஸ். இடம் அடிபணிந்து கொண்டும், இன்னொரு பக்கம் மதச்சார்பற்ற கூட்டணி என்று மக்களை ஏமாற்றும் கூட்டணியாக நம் கூட்டணி இருக்காது.
என்னை நம்பி வருகிற அனைவருக்கும் ஆட்சியிலும், அதிகாரத்திலும் உரிய பங்களிப்பு வழங்கப்படும். 2026 தேர்தலில் இரண்டு கட்சிகளுக்குத்தான் போட்டி. ஒன்று த.வெ.க. மற்றொன்று தி.மு.க. என்று கூறி இருந்தார்.
இந்நிலையில் விஜய் மாநாட்டில் பேசியது தொடர்பாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறுகையில்,
தமிழ்நாட்டை காக்க வந்த அவதார புருஷன் போல் விஜய் தன்னை நினைத்துக்கொள்கிறார். யார் வேண்டுமென்றாலும் கட்சி தொடங்கலாம், மாநாடு நடத்தலாம். ஆனால் மாநாட்டில் என்ன பேச வேண்டும் என்று வரைமுறை இருக்கிறது.
அண்ணாவையும், எம்.ஜி.ஆரையும் தவிர்த்து தமிழ்நாட்டில் அரசியல் செய்ய முடியாது என்பதால் அவர்களை குறிப்பிடுகிறார். ஆனால் விஜயின் அரசியல் ஆசான் யார் என்பது தெரியவில்லை.
அ.தி.மு.க. குறித்த விஜயின் விமர்சன பேச்சுக்களை அ.தி.மு.க. தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். த.வெ.க. தலைவர் விஜய் ஒன்றரை ஆண்டாக கை குழந்தையாக உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி என்பதில் எந்த குழப்பமும் வேண்டாம்.
- சிலர் இருப்பிடத்தை தக்கவைத்துக் கொள்வதற்காக கூறும் கருத்துகளை கவனத்தில் கொள்ள வேண்டாம்.
வரும் 2026-ல் தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சி என அண்ணாமலை பேசியிருந்த நிலையில் இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:
* 2026 தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றால் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமையும்.
* எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி என்பதில் எந்த குழப்பமும் வேண்டாம்.
* சிலர் இருப்பிடத்தை தக்கவைத்துக் கொள்வதற்காக கூறும் கருத்துகளை கவனத்தில் கொள்ள வேண்டாம்.
* தேர்தலில் ராமராக எடப்பாடி பழனிசாமியை முன்னிறுத்தி வெற்றி பெறுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.







