search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தீக்குளித்து தற்கொலை
    X
    தீக்குளித்து தற்கொலை

    களியக்காவிளை அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை

    களியக்காவிளை அருகே இளம்பெண் தனது உடலில் மண்எண்ணை ஊற்றி தீவைத்துக் தற்கொலை செய்து கொண்டார்.
    களியக்காவிளை:

    களியக்காவிளை அருகே செம்மான்விளையை சேர்ந்தவர் ரதீஸ். இவருடைய மனைவி விஜி (வயது 28). இவர்களுக்கு 7 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. விஜி வீட்டில் வைத்து தனது உடலில் மண்எண்ணை ஊற்றி தீவைத்துக் கொண்டார். 

    இதை பார்த்த கணவர் ரதீஸ் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் விஜியை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார். பின்னர் அங்கிருந்து திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலன் இன்றி விஜி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து களியக்காவிளை போலீசார் வழக்குபதிவு செய்து விஜி தற் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.              
    Next Story
    ×