search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    இண்டூர் அருகே மதுவிற்ற பெண்கள் உள்பட 3 பேர் கைது

    இண்டூர் அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மதுவிற்ற பெண்கள் உள்பட 3 பேரை கைது செய்தனர்.
    இண்டூர்:

    தருமபுரி மாவட்டம், இண்டூர் பகுதியில் அனுமதியின்றி மதுவிற்பனை நடந்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அனுமதியின்றி மதுவிற்றதாக பாறைக் கொட்டாய் பகுதியை சேர்ந்த கல்யாணி (வயது48), ராஜா கொல்லஅள்ளியை சேர்ந்த மகேஸ்வரி (50), அண்ணாத்துரை (55) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். 

    மேலும் அவர்களிடம் இருந்து மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்யப்பட்டது.
    Next Story
    ×