என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தூசி அருகே வாகனம் மோதி வாலிபர் பலி - பிணத்துடன் உறவினர்கள் சாலை மறியல்
Byமாலை மலர்4 Feb 2020 11:54 AM GMT (Updated: 4 Feb 2020 11:54 AM GMT)
தூசி அருகே வாகனம் மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவத்தையடுத்து பிணத்துடன் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வெம்பாக்கம்:
தூசி அருகே உள்ள பெரும்புலிமேடு கிராமத்தை சேர்ந்தவர் முருகன் மகன் வெங்கடேசன் (வயது 21). கூலி தொழிலாளி. இவர் நேற்று காலை மோட்டார் சைக்கிளில் செய்யாறு ரோட்டில் உள்ள தனியார் கம்பெனி எதிரில் வந்தார்.
அப்போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் தூசி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாலையில் பிரேத பரிசோதனை முடிந்து வெங்கடேசனின் உடல் காஞ்சீபுரத்தில் இருந்து புலிமேடு கிராமத்திற்கு ஆம்புலன்சில் கொண்டு வரப்பட்டது.
புலிமேடு-செய்யாறு சாலையில் ஆம்புலன்சில் இருந்து உடலை இறக்கி வெங்கடேசனின் உறவினர்களும், பொதுமக்களும் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் விபத்து ஏற்படுத்தியவரை கைது செய்ய வேண்டும் என்றும் கோஷமிட்டனர். இது பற்றி அறிந்ததும் தூசி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த சாலை மறியல் காரணமாக 1 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தூசி அருகே உள்ள பெரும்புலிமேடு கிராமத்தை சேர்ந்தவர் முருகன் மகன் வெங்கடேசன் (வயது 21). கூலி தொழிலாளி. இவர் நேற்று காலை மோட்டார் சைக்கிளில் செய்யாறு ரோட்டில் உள்ள தனியார் கம்பெனி எதிரில் வந்தார்.
அப்போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் தூசி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாலையில் பிரேத பரிசோதனை முடிந்து வெங்கடேசனின் உடல் காஞ்சீபுரத்தில் இருந்து புலிமேடு கிராமத்திற்கு ஆம்புலன்சில் கொண்டு வரப்பட்டது.
புலிமேடு-செய்யாறு சாலையில் ஆம்புலன்சில் இருந்து உடலை இறக்கி வெங்கடேசனின் உறவினர்களும், பொதுமக்களும் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் விபத்து ஏற்படுத்தியவரை கைது செய்ய வேண்டும் என்றும் கோஷமிட்டனர். இது பற்றி அறிந்ததும் தூசி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த சாலை மறியல் காரணமாக 1 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X