என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
தூத்துக்குடி-விளாத்திகுளத்தில் போக்சோ சட்டத்தில் வியாபாரி உள்பட 2 பேர் கைது
தூத்துக்குடி:
விளாத்திகுளம் அருகே உள்ள எப்போதும் வென்றான் சோழபுரத்தை சேர்ந்தவர் ஜெகநாதன்(வயது 72). இவருக்கு திருமணமாகி ஒரு மகன் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி விட்டது. ஜெகநாதனின் மனைவி கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.
இதையடுத்து அதே ஊரை சேர்ந்த பெண் ஒருவர் ஜெகநாதனின் வீட்டில் சமையல் வேலை செய்து வந்தார். அவருக்கு 6-ம் வகுப்பு படிக்கும் மகள் உள்ளார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக ஜெகநாதன் அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இதை கண்டுபிடித்த அப்பகுதி மக்கள் விளாத்திகுளம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் ஜெகநாதனை போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
இதேபோல் தூத்துக்குடி தாளமுத்து நகரை சேர்ந்தவர் மோசஸ்(வயது 67). இவர் அப்பகுதியில் விறகு கடை மற்றும் தண்ணீர் வியாபாரம் செய்து வருகிறார். இவர் கடந்த சில மாதங்களாக அப்பகுதியை சேர்ந்த 17 வயது இளம்பெண்னை பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். இதில் அந்த இளம்பெண் தற்போது 7 மாத கர்ப்பமாக உள்ளார்.
இதையடுத்து இளம்பெண்ணின் பெற்றோர் தூத்துக்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் மோசஸை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். பின்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தி பேரூரணி சிறையில் அடைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்