search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நகை திருட்டு
    X
    நகை திருட்டு

    மதுரையில் வியாபாரி வீட்டில் நகை-பணம் கொள்ளை

    மதுரையில் வியாபாரி வீட்டில் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மதுரை:

    மதுரை பார்க் டவுன் பகுதியைச் சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 49). பருப்பு வியாபாரி. இவர், கடந்த 19-ந்தேதி உறவினர் இல்ல நிகழ்ச்சிக்காக குடும்பத்தினருடன் சென்னை சென்றார்.

    இதனால் அவரது வீடு பூட்டப்பட்டு இருந்தது. இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்துள்ளனர். நேற்று வீடு திரும்பிய அசோக்குமார் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து கூடல் புதூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. வீட்டில் இருந்த 12 பவுன் தங்க நகைகள், 3 வெள்ளி டம்ளர் மற்றும் ரூ. 37 ஆயிரம் ரொக்கம் கொள்ளை போயிருப்பதாக புகாரில் அசோக்குமார் குறிப்பிட்டுள்ளார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×