search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காதல் ஜோடி.
    X
    காதல் ஜோடி.

    இரணியலில் காதலனுடன் போலீசில் கல்லூரி மாணவி தஞ்சம்

    இரணியலில் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு போலீசில் தஞ்சம் அடைந்தனர்.

    இரணியல்:

    இரணியல் அருகே கக்கோடு ஆலுவிளையை சேர்ந்தவர் பத்மகுமார். இவரது மகள் பிரதீபா (வயது 19).

    அந்த பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பிரதீபா பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வருகிறார். அவர் தினசரி வீட்டில் இருந்து கல்லூரிக்கு சென்று வருவது வழக்கம். இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை மாலை வீட்டில் இருந்த பிரதீபா திடீரென்று மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோரும், உறவினர்களும் அவரை பல்வேறு இடங்களிலும் தேடினார்கள். தோழிகள் வீடுகளிலும் அவரை பற்றி விசாரித்தனர். ஆனால் பிரதீபா எங்கு சென்றார் என்பது பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    இதனால் இரணியல் போலீசில் பத்மகுமார் புகார் செய்தார். அந்த புகாரில் மாயமான தனது மகளை கண்டுபிடித்து தரும்படி கூறியிருந்தார். இதைத்தொடர்ந்து இரணியல் போலீசார், மாயமான மாணவி பிரதீபாவை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று மாலை பிரதீபா அதே பகுதியை சேர்ந்த தனது காதலன் திபின் (27) என்ற கட்டிட தொழிலாளியுடன் இரணியல் போலீசில் தஞ்சம் அடைந்தார். தாங்கள் இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வருவதாகவும், தங்கள் காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியதால் போலீசில் தஞ்சமடைந்ததாகவும் தெரிவித்தனர். மேலும் தாங்கள் இருவரும் மேஜர் என்பதால் தாங்கள் திருமணம் செய்து கொண்டு சேர்ந்து வாழ அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.

    இதைத்தொடர்ந்து இரு வீட்டாரின் பெற்றோரையும் போலீஸ்நிலையத்திற்கு அழைத்து போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். பிரதீபாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவரை தங்களுடன் வருமாறு கூறி பாசப்போராட்டம் நடத்தினார்கள். ஆனால் காதலனுடன்தான் வாழ்வேன் என்று பிரதீபா பிடிவாதமாக கூறிவிட்டார்.

    இதைத்தொடர்ந்து அவர்களுக்கு போலீசார் அறிவுரை கூறினர். ஆனால் காதலர்கள் தாங்கள் திருமணம் செய்வதில் உறுதியாக இருந்தனர். இதனால் காதலனுடன் பிரதீபாவை போலீசார் அனுப்பி வைத்தனர்.

    Next Story
    ×