என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மதுரை மாடக்குளம் கண்மாயில் மூழ்கி 15 வயது சிறுவன் பலி
Byமாலை மலர்12 Jan 2020 1:00 PM GMT (Updated: 12 Jan 2020 1:00 PM GMT)
மதுரை மாடக்குளம் கண்மாயில் குளிக்க சென்ற 15 வயது சிறுவன் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தான்.
மதுரை:
மதுரை பொன்மேனி காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முகமதுராஜா. இவரது மகன் முகமதுபயாஸ் (வயது15). இவர் சம்பவத்தன்று மாலை மாடக்குளம் கண்மாய்க்கு குளிக்க சென்றார்.
கண்மாயில் குளித்தபோது எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்கு சென்று சிக்கியதாக தெரிகிறது. அங்கிருந்து முகமது பயசால் கரைக்கு திரும்ப முடியவில்லை. சிறிது நேரம் தத்தளித்த அவர் கண்மாயில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
குளிக்க சென்ற மகன் நீண்ட நேரமாகியும் வராததால் பெற்றோர் அவரை தேடினர். அப்போது கண்மாயில் மூழ்கி முகமது பயாஸ் இறந்தது தெரியவந்தது.
தகவல் அறிந்த எஸ்.எஸ்.காலனி போலீசார் சம்பவ இடம் வந்து சிறுவனை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X