search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "boy died"

    • சிறுவன் மூக்கில் ரத்தம் வழிந்து வாயில் நுரைதள்ளியநிலையில் மயக்கமடைந்தான்.
    • அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே நித்தின் உயிரிழந்தான்.

    தேவதானப்பட்டி:

    பெரியகுளம் அருகில் உள்ள குள்ளப்புரத்தை சேர்ந்த பிரபாகரன் மகன் நித்தின்(5). இச்சிறுவனுக்கு சம்பவத்தன்று மூக்கில் ரத்தம் வழிந்து வாயில் நுரைதள்ளியநிலையில் மயக்கமடைந்தான்.

    உடனடியாக பெற்றோர்கள் க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுவந்தனர். ஆனால் வழியிலேயே நித்தின் உயிரிழந்தான். இதுகுறித்து ஜெயமங்கலம் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • மதுரை அருகே கயிறு கழுத்தை இறுக்கி 5 வயது சிறுவன் பரிதாபமாக இறந்தான்.
    • இது தொடர்பாக சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை பழங்காநத்தம், அக்ரஹாரம் தெருவை சேர்ந்தவர் துரைப்பாண்டி. இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி லட்சுமி. இவர்களின் மகன் விசாகன் (வயது 10). இவர் அங்குள்ள பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான்.

    இந்த நிலையில் விசாகன் நேற்று இரவு வீட்டின் அருகே விளையாடி கொண்டு இருந்தான். அப்போது துணி காயப்போடும் கொடியை கழுத்தில் மாட்டிக்கொண்டு விசாகன் நண்பர்களுடன் விளையாடினான். அப்போது எதிர்பாராத விதமாக கயிறு சிறுவனின் கழுத்தை இறுக்கியது. இதில் மூச்சுத் திணறிய விசாகன், மயங்கினான்.

    இதை பார்த்து அதிர்ச்சி யடைந்த உறவினர்கள் விசாகனை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனாலும் வழியிலேயே சிறுவன் பரிதாபமாக இறந்தான். இது தொடர்பாக சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிறுவனின் உடலை பார்த்து அவரது தாய் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

    துரைப்பாண்டி- லட்சுமி தம்பதிக்கு 10 ஆண்டுகளுக்குப் பிறகு விசாகன் பிறந்தான். நேற்று இரவு தந்தை துரைப்பாண்டியுடன் செல்போனில் பேசி உள்ளார். அப்போது தீபாவளிக்கு என்னென்ன பட்டாசு வாங்க வேண்டும்? என்ற பட்டியலையும் தெரிவித்து உள்ளார். இந்த நிலையில் விசாகன் துணி காய போடும் கயிறு இறுக்கி பரிதாபமாக இறந்த சம்பவம் வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

    • முக்கூடல் அருகே உள்ள இடைகால் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் நாராயணன். இவரது மகன் மருதுபாண்டி(வயது 25).
    • ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த சிறிய பாலத்தின் மீது மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது.

    முக்கூடல்:

    முக்கூடல் அருகே உள்ள இடைகால் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் நாராயணன். இவரது மகன் மருதுபாண்டி(வயது 25). இவர் வீரவநல்லூரில் ஒர்க்‌ஷாப் நடத்தி வருகிறார்.

    பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து

    இவரது கடையில் இடைகாலை சேர்ந்த கரிகாலன் என்பவரது மகன் பிரமுத்து(16) வேலை பார்த்து வந்தார். நேற்று நள்ளிரவில் 2 பேரும் ஒர்க்‌ஷாப்பில் வேலையை முடித்துவிட்டு ஆட்டோவில் வீடு திரும்பிக்கொண்டி ருந்தனர்.

    ஆட்டோவை மருதுபாண்டி ஓட்டி சென்றார். முக்கூடலை அடுத்த பாப்பாக்குடி அருகே சென்றபோது முன்னால் சென்ற வாகனத்தை முந்தி செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த சிறிய பாலத்தின் மீது மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் ஆட்டோவின் முன்பக்கம் நொறுங்கியது. இதில் ஆட்டோவில் இருந்த பிரமுத்து இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மருதுபாண்டி படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டி ருந்தார்.

    தகவல் அறிந்த பாப்பாக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மருதுபாண்டியை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பிரமுத்து உடல் பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குஜிலியம்பாறை அருகே மர்ம காய்ச்சலுக்கு சிறுவன் பரிதாபமாக பலியானான். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    எரியோடு:

    குஜிலியம்பாறை, எரியோடு பகுதிகளில் கோடை வெயில் கொளுத்திய நிலையில் மழையும் பெய்தது. பருவ நிலை மாறி வருவதால் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் பல்வேறு இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.

    மேலும் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    குறிப்பாக மர்ம காய்ச்சல் பரவி வருவதால் அப்பகுதியில் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். ராமகிரியைச் சேர்ந்தவர் மாரிமுத்து. கூலித் தொழிலாளி. இவரது மகன் துர்க்கேஸ் என்ற சீனிவாசன் (வயது 7). அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த சீனிவாசன் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை.

    இதனைத் தொடர்ந்து மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருந்தபோதும் சிகிச்சை பலனின்றி சீனிவாசன் பரிதாபமாக உயிரிழந்தான்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    வைகை ஆற்றில் நண்பர்களுடன் குளித்த சிறுவன் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தான்.

    மதுரை:

    சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட குடிநீர் தேவைக்காக வைகை அணையில் இருந்து கூடுதல் நீர் திறந்து விடப்பட்டது. இதன் காரணமாக கடந்த வாரம் தண்ணீர் இரு கரைகளையும் தொட்டுச் சென்றது.

    தண்ணீர் வரத்து வந்ததையடுத்து மதுரை நகரில் இளைஞர்கள், மாணவர்கள் ஆபத்தை உணராமல் ஆற்றில் குளிக்கச் சென்றனர். இதில் நீச்சல் தெரியாமலும், ஆழமான பகுதிக்கு சிக்கியும் இதுவரை 9 பேர் பலியாகி உள்ளனர். ஆனால் போலீசார் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    தொடர்ந்து ஆபத்தான முறையில் ஆற்றில் பொதுமக்கள் இறங்குவதும், குளிப்பதும் நடந்து வருகிறது.

    மதுரை அவனியாபுரம், வைக்கம் பெரியார் நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மகன் நவீன் (10). மாணவனான இவன் நேற்று நண்பர்களுடன் அண்ணாநகர் பகுதியில் உள்ள வைகை ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தான்.

    அப்போது நவீனுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது. இதில் தண்ணீரில் மூழ்கிய அவனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனே அருகில் இருந்தவர்கள் அவனை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே நவீன் பரிதாபமாக இறந்தான்.

    இது குறித்து அண்ணா நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×