என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குஜிலியம்பாறை அருகே மர்ம காய்ச்சலுக்கு சிறுவன் பலி
Byமாலை மலர்25 April 2019 11:08 AM GMT (Updated: 25 April 2019 11:08 AM GMT)
குஜிலியம்பாறை அருகே மர்ம காய்ச்சலுக்கு சிறுவன் பரிதாபமாக பலியானான். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
எரியோடு:
குஜிலியம்பாறை, எரியோடு பகுதிகளில் கோடை வெயில் கொளுத்திய நிலையில் மழையும் பெய்தது. பருவ நிலை மாறி வருவதால் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் பல்வேறு இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.
மேலும் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குறிப்பாக மர்ம காய்ச்சல் பரவி வருவதால் அப்பகுதியில் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். ராமகிரியைச் சேர்ந்தவர் மாரிமுத்து. கூலித் தொழிலாளி. இவரது மகன் துர்க்கேஸ் என்ற சீனிவாசன் (வயது 7). அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த சீனிவாசன் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை.
இதனைத் தொடர்ந்து மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருந்தபோதும் சிகிச்சை பலனின்றி சீனிவாசன் பரிதாபமாக உயிரிழந்தான்.
இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குஜிலியம்பாறை, எரியோடு பகுதிகளில் கோடை வெயில் கொளுத்திய நிலையில் மழையும் பெய்தது. பருவ நிலை மாறி வருவதால் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் பல்வேறு இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.
மேலும் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குறிப்பாக மர்ம காய்ச்சல் பரவி வருவதால் அப்பகுதியில் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். ராமகிரியைச் சேர்ந்தவர் மாரிமுத்து. கூலித் தொழிலாளி. இவரது மகன் துர்க்கேஸ் என்ற சீனிவாசன் (வயது 7). அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த சீனிவாசன் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை.
இதனைத் தொடர்ந்து மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருந்தபோதும் சிகிச்சை பலனின்றி சீனிவாசன் பரிதாபமாக உயிரிழந்தான்.
இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X