என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
லாஸ்பேட்டையில் கட்டிட தொழிலாளி மயங்கி விழுந்து பலி
புதுச்சேரி:
திண்டிவனம் அருகே கண்ணியம் கிராமத்தை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது47), கட்டிட தொழிலாளி. இவர் தனது உறவினர் ஜெகதீஸ்வரன் என்பவருடன் சேர்ந்து லாஸ்பேட்டை குறிஞ்சி நகரில் ஒரு வீட்டிற்கு கட்டிட வேலைக்கு வந்தனர். மதியம் கட்டிட வேலைசெய்து கொண்டு இருந்த நிலையில் கோபாலகிருஷ்ணனுக்கு திடீரென உடல்நிலை சோர்வு ஏற்பட்டது.
இதையடுத்து அவரை லாஸ்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். பின்னர் வேலை செய்த வீட்டிலேயே ஓய்வெடுக்கும்படி கூறிவிட்டு ஜெகதீஸ்வரன் மட்டும் வேலை செய்து கொண்டு இருந்தார்.
மாலை வேலை முடிந்து கோபாலகிருஷ்ணனை வீட்டுக்கு அழைத்து செல்ல ஜெகதீஸ்வரன் முயன்றார். அப்போது திடீரென கோபாலகிருஷ்ணன் மயங்கி சாய்ந்தார். உடனே அவரை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே கோபாலகிருஷ்ணன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் லாஸ்பேட்டை புறக்காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்