என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
உடன்குடி அருகே பைக் விபத்தில் வாலிபர் பலி
உடன்குடி:
குலசேகரன்பட்டினத்தை சேர்ந்தவர் மாதவன். இவரது மகன் பாலகிருஷ்ணன் (வயது 20). இவர் உடன்குடி மேல பஜாரில் வாகன பேட்டரி பழுதுபார்க்கும் கடை வைத்துள்ளார்.
இந்நிலையில் இவர் நேற்று இரவு மணிநகரில் இருந்து உடன்குடிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே உடன்குடி அய்யாநகரை சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் சந்தன பெருமாள் (29) மோட்டார் சைக்கிளில் வந்தார். இதில் எதிர்பாராதவிதமாக இவர்கள் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேராக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே பாலகிருஷ்ணன் பரிதாபமாக இறந்தார். பலத்த காயமடைந்த சந்தன பெருமாளை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இது குறித்து குலசேகரன்பட்டினம் சப்-இன்ஸ்பெக்டர் செல்லத்துரை மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்