என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பூச்செடிகளை சேதப்படுத்தியதை தட்டிக்கேட்ட பெண்ணை தாக்கி கொலை மிரட்டல்
Byமாலை மலர்10 Jan 2020 9:55 AM GMT (Updated: 10 Jan 2020 9:55 AM GMT)
பூச்செடிகளை சேதப்படுத்தியதை தட்டிக்கேட்ட பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுவை ராஜீவ்காந்தி நகர் ஓம்சக்தி வீதியில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் சரவணன் (வயது42). இவர் வீட்டின் மாடியில் பூச்செடிகளை வைத்துள்ளார். இந்த பூச்செடிகளை அதே வீட்டில் வசிக்கும் கலைவாணி மற்றும் அவரது தாய் பொற்கிலை ஆகிய இருவரும் சேதப்படுத்தி வந்தனர்.
இதனை சரவணனின் மனைவி மாலா தட்டிக்கேட்கும் போது பொற்கிலையும், கலை வாணியும் சேர்ந்து மாலாவுக்கு அடிக்கடி கொலைமிரட்டல் விடுத்து வந்தனர்.
அதுபோல நேற்று காலை மாலா வீட்டின் மாடிக்கு சென்று பூச்செடிகளை பார்வையிட சென்றார். அப்போது கலைவாணி, அவரது தாய் பொற்கிலை மற்றும் ஒரு ஆண் நபர் ஆகிய 3 பேரும் சேர்ந்து மாலாவை சரமாரியாக தாக்கினர். மேலும் தகாத வார்த்தைகளாலும் திட்டி மாலாவையும், அவரது குடும்பத்தையும் கொன்று புதைத்து விடுவோம் என்று மிரட்டல் விடுத்தனர்.
இந்த தாக்குதலில் முகத்தில் காயம் அடைந்த மாலா புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டார். இதுகுறித்து மாலாவின் கணவர் சரவணன் உருளையன் பேட்டை போலீசில் புகார் செய்தார்.
இதேபோல கலை வாணியும், போலீசில் ஒரு புகார் செய்தார். புகாரில் தன்னையும், தனது தாயாரையும் மாலா அவரது கணவர் சரவணன், தங்கை கவிதா அவரது கணவர் முருகன் மற்றும் இவர்களது உறவினர்கள் உதயா, சதீஷ் ஆகியோர் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாகவும், இந்த தாக்குதலில் தனது தாயார் பொற்கிலை காயம் அடைந்ததாகவும், அதோடு அவர்கள் தங்களது வீட்டு கதவை உடைத்து நாற்காலிகளை உடைத்து சேதப் படுத்திய தோடு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறியுள்ளார்.
புதுவை ராஜீவ்காந்தி நகர் ஓம்சக்தி வீதியில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் சரவணன் (வயது42). இவர் வீட்டின் மாடியில் பூச்செடிகளை வைத்துள்ளார். இந்த பூச்செடிகளை அதே வீட்டில் வசிக்கும் கலைவாணி மற்றும் அவரது தாய் பொற்கிலை ஆகிய இருவரும் சேதப்படுத்தி வந்தனர்.
இதனை சரவணனின் மனைவி மாலா தட்டிக்கேட்கும் போது பொற்கிலையும், கலை வாணியும் சேர்ந்து மாலாவுக்கு அடிக்கடி கொலைமிரட்டல் விடுத்து வந்தனர்.
அதுபோல நேற்று காலை மாலா வீட்டின் மாடிக்கு சென்று பூச்செடிகளை பார்வையிட சென்றார். அப்போது கலைவாணி, அவரது தாய் பொற்கிலை மற்றும் ஒரு ஆண் நபர் ஆகிய 3 பேரும் சேர்ந்து மாலாவை சரமாரியாக தாக்கினர். மேலும் தகாத வார்த்தைகளாலும் திட்டி மாலாவையும், அவரது குடும்பத்தையும் கொன்று புதைத்து விடுவோம் என்று மிரட்டல் விடுத்தனர்.
இந்த தாக்குதலில் முகத்தில் காயம் அடைந்த மாலா புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டார். இதுகுறித்து மாலாவின் கணவர் சரவணன் உருளையன் பேட்டை போலீசில் புகார் செய்தார்.
இதேபோல கலை வாணியும், போலீசில் ஒரு புகார் செய்தார். புகாரில் தன்னையும், தனது தாயாரையும் மாலா அவரது கணவர் சரவணன், தங்கை கவிதா அவரது கணவர் முருகன் மற்றும் இவர்களது உறவினர்கள் உதயா, சதீஷ் ஆகியோர் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாகவும், இந்த தாக்குதலில் தனது தாயார் பொற்கிலை காயம் அடைந்ததாகவும், அதோடு அவர்கள் தங்களது வீட்டு கதவை உடைத்து நாற்காலிகளை உடைத்து சேதப் படுத்திய தோடு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X