என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பொங்கல் பரிசு தொகுப்பு கிடைக்காதவர்கள் புகார் செய்யலாம்- கலெக்டர் மகேஸ்வரி அறிவிப்பு
Byமாலை மலர்9 Jan 2020 6:34 AM GMT (Updated: 9 Jan 2020 6:34 AM GMT)
பொங்கல் பரிசு தொகுப்பு கிடைக்காதவர்கள் அந்தந்த பகுதியில் உள்ள வட்ட வழங்கல் அலுவலர்களின் செல்போனில் புகார் தெரிவிக்கலாம் என்று திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
திருவள்ளூர் மாவட்டத்தில் 1,133 கூட்டுறவு ரேஷன் கடைகள் மூலம் 5 லட்சத்து 65 ஆயிரத்து 363 மின்னணு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, இரண்டு அடி நீள கரும்புத்துண்டு, தலா 20 கிராம் முந்திரி, திராட்சை மற்றும் 5 கிராம் ஏலக்காய் ஆகியவை அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பும், ரூ.1,000 ரொக்கமும் இன்று முதல் மூன்று நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கத்தைப் பெறாமல், விடுபட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு வருகிற 13-ந் தேதிக்குள் முழுமையாக வழங்கி முடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பரிசு பொருள்கள் கிடைக்காதவர்கள் அந்தந்த பகுதியில் உள்ள வட்ட வழங்கல் அலுவலர்களின் செல்போனில் புகார் தெரிவிக்கலாம். திருவள்ளூர்- 94450 00177, திருத்தணி-94450 00182, பள்ளிப்பட்டு-94450 00183, பொன்னேரி-94450 00178, கும்மிடிப்பூண்டி-94450 00179, ஊத்துக்கோட்டை- 80984 79640, பூந்தமல்லி- 94450 00181, ஆவடி- 98949 39884, ஆர்.கே.பேட்டை- 96296 41771 மற்றும் மாவட்டக் கட்டுப்பாட்டு அறை 04427662400 ஆகிய எண்களில் புகார் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
திருவள்ளூர் மாவட்டத்தில் 1,133 கூட்டுறவு ரேஷன் கடைகள் மூலம் 5 லட்சத்து 65 ஆயிரத்து 363 மின்னணு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, இரண்டு அடி நீள கரும்புத்துண்டு, தலா 20 கிராம் முந்திரி, திராட்சை மற்றும் 5 கிராம் ஏலக்காய் ஆகியவை அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பும், ரூ.1,000 ரொக்கமும் இன்று முதல் மூன்று நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கத்தைப் பெறாமல், விடுபட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு வருகிற 13-ந் தேதிக்குள் முழுமையாக வழங்கி முடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பரிசு பொருள்கள் கிடைக்காதவர்கள் அந்தந்த பகுதியில் உள்ள வட்ட வழங்கல் அலுவலர்களின் செல்போனில் புகார் தெரிவிக்கலாம். திருவள்ளூர்- 94450 00177, திருத்தணி-94450 00182, பள்ளிப்பட்டு-94450 00183, பொன்னேரி-94450 00178, கும்மிடிப்பூண்டி-94450 00179, ஊத்துக்கோட்டை- 80984 79640, பூந்தமல்லி- 94450 00181, ஆவடி- 98949 39884, ஆர்.கே.பேட்டை- 96296 41771 மற்றும் மாவட்டக் கட்டுப்பாட்டு அறை 04427662400 ஆகிய எண்களில் புகார் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X