search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாயம்
    X
    மாயம்

    திருபுவனை அருகே திருமணமான 3 மாதத்தில் பெண் மாயம்

    திருபுவனை அருகே திருமணமான 3 மாதத்தில் மருந்து கடைக்கு சென்ற பெண் மாயமானார். இது குறித்து அவரது கணவர் போலீசில் புகார் செய்தார். போலீசார் அவரை தேடி வருகின்றனர்.





    திருவாண்டார்கோவில்:

    திருபுவனை அருகே உள்ள திருபுவனை பாளையத்தை சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி அனிதா. (வயது 24). இவர்களுக்கு திருமணமாகி 3 மாதமே ஆகிறது. 

    இந்த நிலையில் அனிதா மருந்து கடைக்கு சென்று மருந்து வாங்கி விட்டு வருவதாக கூறி வெளியே சென்றார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை.  அவர் மாயமாகி விட்டதாக தெரிகிறது. 

    இது தொடர்பாக கண்ணன் திருபுவனை போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர் தானாக  வேறு எங்காவது சென்று விட்டாரா? அல்லது அவரை யாரும் கடத்தி சென்று விட்டார்களா? என்பது தெரியவில்லை. தொடர்ந்து போலீசார் தேடி வருகின்றனர்.
    Next Story
    ×