search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செய்தியாளர்களிடம் பேசிய காவல்துறை ஆணையர் விஸ்வநாதன்
    X
    செய்தியாளர்களிடம் பேசிய காவல்துறை ஆணையர் விஸ்வநாதன்

    சென்னையில் குற்றங்கள் குறைந்துள்ளன - காவல் ஆணையர் விஸ்வநாதன்

    சென்னையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவால் குற்றங்கள் குறைந்துள்ளன என மாநகர காவல்துறை ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    சென்னை மாநகர காவல்துறை ஆணையர் விஸ்வநாதன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    பெண்களுக்கு எதிரான செயின் பறிப்பு குற்றங்கள் 2019-ல் 50 சதவீதம் குறைந்துள்ளன. சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டதால் சென்னையில் குற்றங்கள் குறைந்துள்ளன.

    இந்தியாவில் பெண்கள் பாதுகாப்பில் சென்னை காவல்துறை சிறந்து விளங்குகிறது. காவலன் செயலி குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதால் 10 லட்சம் பேர் அதை பதிவிறக்கம் செய்துள்ளனர்.

    வெளிமாநில குற்றவாளிகளைக் கண்டறிந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஆதாய கொலைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெருமளவு குறைந்துள்ளன. விபத்துகளில் காயமடைந்தவர்கள், உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளன என தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×