search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    திருவையாறில் தூக்குபோட்டு பெண் தற்கொலை

    திருவையாறில் குடும்ப தகராறு காரணமாக தூக்குபோட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.

    திருவையாறு:

    திருவையாறு செண்பகப் பேட்டைத் தெருவை சேர்ந்தவர் செந்தில் (வயது38). லாரி டிரைவர்.

    இவருக்கு 11 ஆண்டுகள் முன்பு திருமணம் நடைபெற்று மகேஸ்வரி(27) என்ற மனைவியும், இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளது.

    குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த சில மாதங்களாக மகேஸ்வரி மிகவும் மன உளைச்சலில் இருந்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டு தோட்டத்தில் உள்ள ஒரு மரத்தில் தூக்குபோட்டு தற்கொலைக்கு முயற்சி செய்தார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனே மகேஸ்வரியை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இறந்து விட்டார்.

    இது குறித்து கணவர் செந்தில் கொடுத்த புகாரின் பேரில் திருவையாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×