என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
மதுரையில் மின் வாரிய அதிகாரி வீட்டில் நகை-பணம் கொள்ளை
மதுரை:
மதுரை ஆனையூர் ராமலிங்கா நகரைச் சேர்ந்தவர் வசந்தகுமார் (வயது 46). இவர், கே.புதூர் மின் வாரிய அலுவலகத்தில் உதவி தணிக்கை அதிகாரியாக உள்ளார். இவர் நேற்று இரவு குடும்பத்தினருடன் வீட்டின் முதல் மாடியில் படுத்து உறங்கினார். இதனை அறிந்த மர்ம மனிதர்கள் இன்று அதிகாலை வீட்டின் கீழ்த்தள கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.
அவர்கள் பீரோவில் இருந்த 6 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரத்தை கொள்ளையடித்துச் சென்று விட்டனர். காலையில் கண் விழித்து கீழே இறங்கியவர்கள் பீரோ திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்துது கூடல் புதூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் ஆனையூர் மலர் நகரைச் சேர்ந்தவர் முருகானந்தம். இவரது வீட்டின் கதவு இரவில் பூட்டப்படாமல் இருந்துள்ளது. இதனை பயன்படுத்தி மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்தனர்.
அவர்கள் பீரோவில் இருந்த ஒரு பவுன் மோதிரம், 1 ஜோடி வெள்ளிக் கொலுசு மற்றும் ரூ.5 ஆயிரத்தை திருடிச் சென்று விட்டனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்