என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மாணவிக்கு பாலியல் தொல்லை முதியவர் போக்சோவில் கைது
Byமாலை மலர்13 Dec 2019 11:13 AM GMT (Updated: 13 Dec 2019 11:13 AM GMT)
கோவையில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து முதியவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
கோவை:
கோவையை சேர்ந்த 13 வயது மாணவி மாநகராட்சி பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். அவர் பள்ளி செல்லும் போது ரங்கே கவுடர் வீதியில் வசித்து வரும் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ராஜூ (60) என்பவர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
அவர் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததால் அதிர்ச்சி அடைந்த மாணவி தனது பள்ளி ஆசிரியையிடம் கூறினார். அவர் மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார். இதனை தொடர்ந்து பெற்றோர் கோவை மேற்கு அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் வழக்குபதிவு செய்து மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் ராஜூவை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். பின்னர் அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X