search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    மேலூர் அருகே இளம்பெண்ணை கர்ப்பமாக்கி விட்டு திருமணத்துக்கு மறுத்த வாலிபர் குடும்பத்துடன் கைது

    இளம் பெண்ணை கர்ப்பமாக்கிவிட்டு திருமணத்துக்கு மறுத்த வாலிபரை போலீசார் குடும்பத்துடன் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மதுரை:

    மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள தும்பைபட்டி காலனியைச் சேர்ந்தவர் சேகவன். இவரது மகள் திவ்யபாரதி (21). புதுப் பட்டி காலனியைச் சேர்ந்த சின்ன லாவு என்பவரது மகன் அஜித் (23) இருவரும் உறவினர்கள்.

    இந்த நிலையில் அஜித் திருமண ஆசைகாட்டி திவ்யபாரதியுடன் பழகி யுள்ளார். இதில் கர்ப்ப மான திவ்யபாரதியை கொடுக் கம்பட்டியில் உள்ள உறவினர் சித்ரா என்பவரது வீட்டில் தங்க வைத்த அஜித் திருமணம் செய்ய தொடர்ந்து டிமிக்கி கொடுத்து வந்துள்ளார்.

    இதனால் திவ்ய பாரதிக்கும், அஜித்துக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த விவரம் அஜித்தின் பெற்றோருக்கு தெரிய வர அவர்களும் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள் ளனர்.

    இதனால் கர்ப்பமாக்கி விட்டு தன்னை திருமணம் செய்ய மறுப்பதாக திவ்ய பாரதி மேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத் தில் புகார் செய்தார்.

    இன்ஸ்பெக்டர் நிர்மலா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி னர். இதையடுத்து இளம் பெண்ணை ஏமாற்றியதாக அஜித் அவரது தந்தை சின்ன லேவு, தாயார் பஞ்சு (40), உறவினர் சித்ரா ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
    Next Story
    ×