என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
திருப்பூர் புதிய பஸ் நிலையத்தில் 2 மாணவர்கள் மீட்பு
திருப்பூர்:
திருப்பூர் புதிய பஸ் நிலையத்தில் திருப்பூர் வடக்கு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது 15 வயது மாணவர் ஒருவர் பள்ளி சீருடையுடன் சந்தேகத்திற்கு இடமாக சுற்றி திரிந்தார். அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது அந்த மாணவன் தேனியை சேர்ந்தவர் என்பதும் அங்குள்ள பள்ளியில் 10-ம்வகுப்பு படிப்பதும் தெரியவந்தது.
மேலும் பெற்றோர் திட்டியதால் பள்ளிக்கு செல்லாமல் பஸ் ஏறி திருப்பூர் வந்தது தெரியவந்தது. எங்கு செல்வது என்று தெரியாமல் தவித்த போது போலீசார் பிடியில் சிக்கியுள்ளான்.
இதனை அடுத்து மாணவனின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்து உள்ளனர். அவர்களிடம் மாணவனை போலீசார் ஒப்படைத்தனர்.
இதேபோல் திண்டுக்கலில் இருந்து திருப்பூர் புதிய பஸ் நிலையத்தில் வந்து இறங்கிய 14-வயது மாணவரையும் வடக்கு போலீசார் பிடித்தனர். அவரும் பெற்றோர் திட்டியதால் திருப்பூருக்கு வந்தது தெரியவந்தது.
சிறுவனின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்து அந்த மாணவனையும் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
திருப்பூரில் ஒரே நாளில் பெற்றோரிடம் கோபித்துக்கொண்டு புதிய பஸ் நிலையத்தில் தவித்த 2 மாணவர்களை போலீசார் உரிய நேரத்தில் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசாருக்கு போலீஸ் கமிஷனர் சஞ்சய் குமார் பாராட்டு தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்