என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விபத்தில் காயம் அடைந்த அவதியால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை
Byமாலை மலர்5 Dec 2019 12:24 PM GMT (Updated: 5 Dec 2019 12:24 PM GMT)
விபத்தில் காயம் அடைந்து அவதி அடைந்து வந்ததால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி:
புதுவை மூலகுளம் ஜெ.ஜெ. நகரை சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ். இவரது மனைவி சரஸ்வதி. இவர்களது மகன் ரோபர் (வயது 23). இவர் புதுவை காமராஜர் சாலையில் உள்ள சினிமா தியேட்டரில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ரோபர் விபத்தில் சிக்கி தலையில் காயம் அடைந்தார். இதற்காக சிகிச்சை பெற்று வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். விபத்தில் தலையில் ஏற்பட்ட காயத்தால் ரோபர் அவதி அடைந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் விரக்தியில் இருந்து வந்தார்.
விரக்தியில் இருந்து மீள ரோபரை அவரது தாய் சரஸ்வதி முதலியார்பேட்டை அனிதா நகரில் உள்ள தனது மகள் வீட்டில் தங்க வைத்திருந்தார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று ரோபருக்கு தலையில் வலி அதிகமானதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ரோபர் தனது அக்காள் வீட்டில் வைத்திருந்த தரையை சுத்தம் செய்ய வைத்திருந்த விஷத்தை எடுத்து குடித்து விட்டார். இதில், மயங்கி விழுந்த ரோபரை அவரது அக்காள் குடும்பத்தினர் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ரோபர் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார். இதுகுறித்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X