search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    சுரண்டை அருகே மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி

    சுரண்டை அருகே மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சுரண்டை:

    சுரண்டை அருகே உள்ள பங்களா சுரண்டை வேத கோவில் தெருவை சேர்ந்தவர் தங்கபாண்டியன் (வயது 75), மாடு மேய்க்கும் தொழிலாளி. இவர் கடந்த 22-ந்தேதி சுரண்டை அருகே மாடு மேய்த்துக்கொண்டிருந்தார். அப்போது அவர் மீது அடையாளம் தெரியாத மோட்டார் சைக்கிள் மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் தங்கபாண்டியன் படுகாயம் அடைந்தார்.

    பின்னர் அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு தென்காசி அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்நிலையில் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று பரிதாபமாக இறந்தார். இது குறித்து சுரண்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×