search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளை
    X
    கொள்ளை

    வல்லத்தில் தனியார் பள்ளி முதல்வர் வீட்டில் நகை திருட்டு

    வல்லத்தில் தனியார் பள்ளி முதல்வர் வீட்டில் நகை திருடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வல்லம்:

    வல்லம் தேவாரநகரை சேர்ந்தவர் ரமேஷ்பாபு (வயது 53). இவர் தனியார் பள்ளியில் முதல்வராக உள்ளார். அதே பள்ளியில் அவரது மனைவி சரஸ்வதி ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

    இவர்கள் தினமும் வீட்டை பூட்டிவிட்டு காலை பள்ளிக்கு சென்றுவிட்டு மாலையில்தான் வீடு திரும்புவார்கள்.

    இதனை நோட்டமிட்ட கொள்ளையர்கள் நேற்று முன்தினம் கணவன்-மனைவி இருவரும் வேலைக்கு சென்றதும் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவில் வைக்கப்பட்டிருந்த 7 பவுன் நகை, கேமிரா, வாட்ச் உள்ளிட்ட பொருட்களை திருடிச் சென்றுவிட்டனர். இவைகளின் மதிப்பு ரூ.1 லட்சத்து 15 ஆயிரம் என்று கூறப்படுகிறது.

    இதுபற்றிய புகாரின் பேரில் வல்லம் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×