என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
சுசீந்திரம் அருகே சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தம்
என்.ஜி.ஓ.காலனி:
சுசீந்திரம் அருகே உள்ள ஒரு கிராமத்தில் இன்று காலை ஒரு திருமண நிகழ்ச்சி நடந்தது. திருமண விழாவுக்கு அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் பலர் வந்த வண்ணம் இருந்தனர். விழாவுக்கு வந்தவர்களில் சிலர் மணப்பெண்ணை பார்க்க சென்றனர். அந்த பெண் சிறுமி போல இருந்தார்.
இதனால் சந்தேகம் அடைந்த சிலர் இது பற்றி சுசீந்திரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
சுசீந்திரம் போலீசார், குழந்தைகள் தடுப்பு பிரிவு மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகளை அழைத்து கொண்டு சம்பவம் நடந்த பகுதிக்கு விரைந்து சென்றனர்.
அங்கு திருமண வீட்டுக்கு சென்ற போலீசாரும் அதிகாரிகளும் மணமக்களின் பெற்றோரை சந்தித்து அவர்களின் வயது மற்றும் விபரங்களை கேட்டனர். இதில் மணப்பெண் திருமண வயதை அடையவில்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.
பின்னர் சிறுமியின் பெற்றோரை அழைத்து அவர்களுக்கு அறிவுரை கூறியதோடு, திருமண வயதை எட்டும் முன்பு திருமணம் செய்து வைப்பது சட்டப்படி குற்றம் என்பதை எடுத்து கூறினர்.
சிறுமியை திருமணம் செய்ய இருந்தவர் வெளி மாவட்டத்தை சேர்ந்தவர் என தெரியவந்தது. அவருக்கும் அறிவுரைகள் கூறப்பட்டது. பின்னர் போலீசார் மற்றும் அதிகாரிகள் திருமணத்திற்கு தயாராக இருந்த சிறுமி மற்றும் மணமகனை கலெக்டர் அலுவலகம் அழைத்து வந்து விசாரித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்