என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மதுரையில் முதியவரை கத்தியால் குத்தியவர் கைது
Byமாலை மலர்14 Nov 2019 5:32 PM GMT (Updated: 14 Nov 2019 5:32 PM GMT)
முன் விரோத தகராறில் முதியவரை கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை:
சமயநல்லூர் சாமிநாதன் நகரைச் சேர்ந்தவர் கோபால் நேரு (வயது 58). இவருக்கும், அதே பகுதியில் வசிக்கும் ரவி (33) என்பவருக்கும் இடையே ஏற்கனவே முன் விரோதம் உள்ளது.
இந்த நிலையில் கோபால் நேரு சம்பவத்தன்று காலை பவர்ஹவுசில் உள்ள இரும்பு கடையில் அமர்ந்து நண்பருடன் பேசிக் கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த ரவி தகராறில் ஈடுபட்டார்.
இருவருக்கும் இடையே வாக்குவாதம் வலுத்து சண்டையாக மாறியது. இதில் கோபால் நேருவுக்கு சரமாரி கத்திக்குத்து விழுந் தது. இதையடுத்து அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக கோபால் நேரு சமயநல்லூர் போலீசில் புகார் செய்தார். சப்- இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி வழக்குப்பதிவு செய்து ரவியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X