search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முன்விரோத தகராறு"

    • இருதரப்பினர் இடையே ‌‌‌‌‌‌‌‌‌மோதல் ஏற்பட்டது
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    அணைக்கட்டு:

    அணைக்கட்டு தாலுகா ஒடுகத்தூர் அடுத்த அகரம் கிராமத்த சேர்ந்தவர்கள் சிவக்குமார், விவேக், மோகன் ஆகியோர் நண்பர்கள்.

    இவர்களுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், கமல், ராஜேஷ், ராமையா, ராஜேஷ், விக்னேஷ், கார்த்தி ஆகியோருக்கும் இடையே பல ஆண்டுகளாக முன்விரோதம் இருந்து வருகிறது.

    இந்நிலையில் நேற்று மீண்டும் இருதரப்பி னருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது அவர்கள் ஒருவரை, ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர்.

    அப்போது மணிகண்டன், கமல், ராஜேஷ், ராமையா, ராஜேஷ், விக்னேஷ், கார்த்தி ஆகியோர் சேர்ந்து, சிவக்குமார், விவேக், மோகன் ஆகியோரை உடைந்த மது பாட்டில் மற்றும் பிளேடால் சரமாரியாக ஆங்காங்கே வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

    இதில் பலத்த காயம் அடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அடுக்க ம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வேப்பங்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இரு சக்கர வாகனத்தில் சென்ற அருணா தேவன் திடீரென்று கீழே விழுந்து விட்டார்.
    • அருணாதேவன் மற்றும் ஆனந்தவேல் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    கடலூர்:

    நெல்லிக்குப்பம் அடுத்த நத்தம் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகரன் (வயது 39). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அருணா தேவன் என்பவருக்கும் முன் விரோத தகராறு இருந்து வந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ராஜசேகரன் தந்தை தட்சிணாமூர்த்தி என்பவர் மாடு ஓட்டிக்கொண்டு வந்தபோது, இரு சக்கர வாகனத்தில் சென்ற அருணா தேவன் திடீரென்று கீழே விழுந்து விட்டார். இதன் காரணமாக இரு தரப்பினருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் சம்பவத்தன்று அருணா தேவன் உள்ளிட்ட 4 பேர் கொண்ட கும்பல் ராஜசேகரனை திடீரென்று தாக்கி கத்தியால் வெட்டினர்.

    இதனை பார்த்த குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து ரத்த வெள்ளத்தில் இருந்த ராஜசேகரனை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இது குறித்து ராஜசேகரன் நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த அருணா தேவன், ஆனந்தவேல், அசோக் குமார், அன்பு ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் அருணாதேவன் மற்றும் ஆனந்தவேல் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

    ×